Page 2 of 22
அவனை தேடி போலீஸ் அதிகாரிகள் வந்தார்கள்.
அவர்களைக் கண்டதும் அவள் திகைத்தாள் கோவலனோ குழம்பினான்
”வாங்க என்ன விசயம் எதுக்காக வந்திருக்கீங்க” என கோவலன் கேட்க
”கோவலன் நாங்க உங்களை கைது செய்றோம்“
”கைதா எதுக்கு”
”சிலம்பரசன் யாரு உங்களுக்கு தெரிஞ்சவரா”
“எனக்கு நண்பனா ஒரு காலத்தில இருந்தவன், என்னோட கல்லூரியில வேலை பார்த்தவன் அவ்ளோதான் ஏன் அவனை கேட்கறீங்க”
”அவனை நீங்க கொன்னுட்டதா எங்களுக்கு புகார் வந்திருக்கு”
”எது நானா”
“ஆமாம்”
”இல்லை இது பொய்”
“சமீபத்தில நீங்க ஊட்டிக்கு போனீங்களா இல்லையா”
”ஆமாம் போனேன் அதுக்கு என்ன இப்ப”
”அங்கதான் கொலை நடந்திருக்கு”
”நான்தான் கொலை செய்தேன்னு ஆதாரம் இருக்கா உங்ககிட்ட”