“தேங்க்ஸ் மேம்!”
வினாயக்கை விட்டு தள்ளி வந்த சக்தி, அழைப்பை ஏற்று, மொபைலை காதில் வைத்தாள்.
சத்யா மதியூர் இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் எனும் தேனின் மனைவி. சக்திக்கு மதியூரில் கிடைத்த புதிய தோழி. இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு கொலைக் குற்றவாளியை கண்டுப்பிடித்த அனுபவத்தில், மதியூரில் சின்ன டிடெக்டிவ் ஏஜென்சி தொடங்கி இருந்தார்கள்.
“குட் மார்னிங் சத்யா!”
“மார்னிங் சக்தி. என்னவோ ரோட்ல யாரோடவோ பேசிட்டு நடந்துட்டு இருக்கீயாமே? கேள்வி பட்டேன்!” சத்யாவின் குரல் எப்போதும் போலவே க்ரிஸ்ப் ஆக ஒலித்தது!
“அதுக்குள்ளே உன் வரைக்கும் நியூஸ் வந்திருச்சா??? இந்த மாதிரி இன்ஸ்டன்ட் இன்டலிஜன்ட் நெட்வொர்க்கை வேற எங்கேயும் கண்டுப்பிடிக்க முடியாது. எப்படி தெரிஞ்சது? யார் சொன்னா?”
“என் வீடு பக்கத்துல தானே இருக்க? வீட்டுக்கு வா. இன்னைக்கு உன்னோட ஃபேவரைட் வெங்காய சட்னி செஞ்சிருக்கேன். தோசை சாப்பிட்டுட்டே பேசலாம், வா!”
“ஓகே பாஸ். பத்து நிமிஷத்துல இருப்பேன். எல்லாம் சுட சுட ரெடியா எடுத்து வைங்க!”
“பாஸ்ன்னு கூப்பிட்டு வேலையும் வாங்குற? சீக்கிரம் வந்து சேரு!” பேச்சில் இருந்த காரம் சத்யாவின் குரலில் இல்லை! அதில் நட்பு மட்டுமே இருந்தது!
ஃபோனை பாக்கெட்டில் வைத்து விட்டு சத்யாவின் வீட்டை நோக்கி நடந்தாள் சக்தி!
சத்யாவிடம் சொன்னது போல பத்து நிமிடத்திற்குள் சத்யா வீட்டு காலிங் பெல்லை அழுத்தினாள் சக்தி.
சத்யா கதவை திறந்த உடன் வீட்டின் உள்ளே இருந்து கம கம என சட்னி வாசனை வீசியது.