“ஹுஹும்! எனக்கு அவன் மேல நம்பிக்கை இல்லையாம். அப்படி நம்பாத என் கூட அவனும் பேச மாட்டானாம்!”
“பரவாயில்லை சக்தி, உங்க லவ் லைஃப் இன்ட்ரஸ்டிங்கா போகுது!”
“எரிச்சல் படுத்தாதே சத்யா!”
“இல்லை சக்தி. நீ யார் கூடவோ பேசிட்டு நடக்குறேன்னு எனக்கு ஃபோன் செய்து யாரு என்னன்னு விசாரிச்சார் டாக்டர். எனக்கு தெரியாதுன்னு சொன்னேன். அது ஆள் நடமாட்டம் இல்லாத இடமாம். உன் சேஃப்ட்டிக்காக உடனே ஃபோன் செய்து பேச வேற சொன்னார்.”
“ஜூப்பிட்டரோட தம்பியா இருப்பான் போல இருக்கு!”
“அது யாரு ஜூப்பிட்டர்?”
“வினாயக்ன்னு ஒருத்தரை மீட் செய்தேன் சத்யா. அவர் ஒரு சையன்டிஸ்ட். கைல எலக்ட்ரானிக் நாய் வச்சிருந்தார். அது பேரு ஜூப்பிட்டர். அந்த வினாயக் கூட தான் பேசிட்டு இருந்தேன்.”
“என்ன பேசிட்டு இருந்த?”
“முன்னாடியே சென்னைல வினாயக்கையும் அந்த நாய் குட்டியையும் பார்த்திருக்கேன். அவர் அந்த நாய் குட்டிக்காக சொல்ற கான்சப்ட் நல்லா இருக்கு. கமர்ஷியலா ஓடுமான்னு எனக்கு தெரியலை!” சக்தி வினாயக் சொன்ன விபரங்களை சுருக்கமாக சத்யாவிடம் சொன்னாள்.
“ஜூப்பிட்டர் ஓடுதா, நிக்குதாங்குறது அவர் பிரச்சனை, விட்டுத் தள்ளு. ஆனாலும் போலி டாக்டர் உங்க இரண்டு பேரையும் பார்த்து டென்ஷன் ஆயிட்டார் போலருக்கு. இன்னைக்கே வந்து வெள்ளைக் கொடி காட்டி பேசுவார் பாரேன்!”
“ஐ டோன்ட் கேர்!” அலுப்புடன் சொன்னாலும், சக்தியின் இதழ்களில் மீண்டும் பழைய புன்னகை உதயமாகி இருந்தது.
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்