மின்னியது.
“ஹேய் சக்தி, இப்போ பேசப் போறீயா இல்லையா?”
“பேச பெருசா ஒன்னும் கிடையாது சத்யா. நானும் போலி டாக்டரும் பேசுறது கிடையாது. நாங்க பேசி இரண்டு நாள் ஆச்சு!”
“என்னது?? ஊடலா??”
“மண்ணாங்கட்டி!” சக்தியின் கண்களில் பச்சை மிளகாய் காரம் இருந்தது!
“சரி சரி கத்தாதே! ஏன் பேசுறது இல்லை சக்தி?” சத்யா தண்மையாகவே விசாரித்தாள்.
“பதினஞ்சு வருஷமா எங்கே போயிருந்தேன்னு கேட்டேன் சத்யா. அதுக்கு அந்த டாக்டர் என்ன சொன்னான் தெரியுமா?”
“என்ன?”
“உன் கிட்ட சொல்லனும்னு நினைச்சிருந்தா இந்நேரம் சொல்லி இருப்பேன். அதான் சொல்ல முடியலைன்னு சொல்லிட்டேனே, எதுக்கு திரும்ப திரும்ப அதையே கேட்குறேன்னு கேட்குறான்!”
“அடப்பாவி! அவ்வளவு கொழுப்பு வந்திருச்சா டாக்டருக்கு? எல்லாம் பர்வதம் பாட்டி கொடுக்குற இடம்!”
“அதை பத்தி எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அவன் சொன்ன பதில் எனக்குப் பிடிக்கலை. அதனால உனக்கு எப்போ அந்த ரகசியம் பத்தி என் கிட்ட சொல்ல தோணுதோ அப்போ வந்து சொல்லு, அது வரைக்கும் என் கிட்ட பேசாதேன்னு சொல்லிட்டேன்!”
“டாக்டரும் பேசலையா?”