“தேன் நீ சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்டுறதுல அதிசயம் ஒன்னுமில்லை சத்யா. உன் சமையல் அபாரம். வாசனை தூளா இருக்கு. தோசை ரெடியா?” சக்தி ஆர்வத்துடன் கேட்டாள்.
“வா வா, எல்லாம் ரெடியா இருக்கு. சாப்பிடு!”
சத்யா சக்திக்கு தோசை சட்னி எடுத்துக் கொடுத்து விட்டு, தனக்கும் ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வந்தாள்.
“யாரது உனக்கு ஃபோன் செய்து நியூஸ் கொடுத்தது?” சக்தி தோசையை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டே தோழியிடம் கேட்டாள்.
“வேற யாரு? உன் போலி டாக்டர் சாந்ததுரை தான்,” என்றாள் சத்யா கண் சிமிட்டலுடன்!
சக்தி வாடகைக்கு தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளன் டாக்டர் சாந்ததுரை. அவனுக்கு சக்தி மீது இருக்கும் எக்ஸ்ட்ரா ஈடுபாடு ஊரில் அனைவருக்கும் தெரிந்த ரகசியம். அவனையும் மறைந்துப் போன அவன் குடும்பத்தையும் சுற்றி சில மர்மங்கள் இருக்கவே சக்தி அவனை விட்டு தள்ளியே இருந்தாள்.
இப்போதும் சத்யாவின் கேலிக்கு பதில் சொல்லாமல் மௌனமாக தான் இருந்தாள் சக்தி!
சக்தி அப்படி ஒன்றும் சொல்லாமல் இருக்கவும், கோபப் படுகிறாளா என்று தெரிந்துக் கொள்ள சக்தியை நிமிர்ந்துப் பார்த்தாள் சத்யா.
சக்தி ஒரு மர்ம புன்னகை மின்ன தோசை அட்டாக்கில் ஈடுப் பட்டிருந்தாள்.
“என்ன சக்தி சிரிக்குற??? ஹையையோ உனக்கு சிரிக்க எல்லாம் தெரியுதே. நல்ல விஷயமே கிடையாதே!” சத்யா இப்போதும் கேலி செய்தாள்!
அதற்கும் சக்தி பதில் சொல்லவில்லை. அவள் இதழ்களில் மட்டும் அதே புன்னகை