கைகூப்பி கெஞ்ச ஆவுடையப்பனுக்கு கோபம் தலைக்கேறியது
”அவனுங்களுக்காக என்னை நீ எதிர்த்து நிக்கலாமா”
”மேலும் மேலும் நீங்க பாவத்தை சேர்க்க கூடாதுன்னு நினைக்கிறேன்பா, அவங்களை விட்டுடுங்க”
”அவங்களை விட்டா மறுபடியும் இங்க வந்து ஆர்பாட்டம் செய்வாங்க“
”அப்பா அவங்க கேட்கறதும் நியாயம்தானே, அவங்களை அடிமையாக்காதீங்க வேணும்னா கூலிக்கு வேலையாட்களா வைச்சிக்குங்க, அவங்களுக்கு சுதந்திரத்தை கொடுங்க, இரண்டா பிரிஞ்சிக் கிடக்கற ஊரை ஒண்ணாக்குங்கப்பா”
”ஆண்டாள் போதும் வழக்கத்தை மாத்தறது தப்பு, முன்னோர்கள் செய்த விசயத்தை மாத்தக்கூடாது“
”ப்ச் போதும்பா இறந்து போனவங்களுக்காக உயிரோட இருக்கறவங்களை பகைச்சிக்கனுமா வேணாம்பா எனக்காக” என அவள் கண்கள் கலங்கி கேட்க ஆவுடையப்பன் மனம் இறங்கி வந்தார்.
”அவங்களை போகவிடுங்க” என கட்டளையிட ஆண்டாளுக்கு நிம்மதியாகிப் போனது.
ஈஸ்வரனின் கூட்டாளிகள் அவனை தூக்கிக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடினார்கள். ஆண்டாளோ ஈஸ்வரனையே பார்க்க ஈஸ்வரனும் ஆண்டாளையே பார்த்தபடி சென்றான். இருவரின் எண்ணங்களும் ஒரு இடத்தில் ஒத்துப்போனதாலோ என்னவோ இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தது, அந்த விருப்பம் காதலாக மாறும் தருணமும் வந்தது.
அன்றைய இரவு போராளிகள் அனைவரும் ஒரு இடத்தில் ஒன்றுகூடி பேசினார்கள்
”அந்த ஆவுடையப்பனால நம்ம ஆளுங்க எத்தனை பேரு காயப்பட்டு கஷ்டப்படறாங்க