ஐஸ்வர்யாவும் இறங்கினார்கள்.
"என்னம்மா போலீஸ் வண்டி நிக்குது? ஏதாவது ப்ராப்ளமா?" ராகுல் அக்கறையுடன் கலைவாணியிடம் விசாரித்தான்.
"இல்லை ராகுல். இவரு தென்றல்வாணன். மதியூர் இன்ஸ்பெக்டர். வினாயக் கிட்ட பேச வந்திருக்கார்," என்றாள் கலைவாணி.
"வினாயக் கிட்டேயா? எதுக்கு?"
தென்றல்வாணன் மீண்டும் சுருக்கமாக தான் வந்த காரணத்தை ராகுலிடம் சொன்னான். ராகுலுக்கும் ஆச்சர்யப்படுவதை தாண்டி விபரங்கள் எதுவும் தெரியவில்லை!
"ஓகே மேடம், நான் இப்போ கிளம்புறேன். இந்த கேஸ் பத்தி இன்னும் நிறைய டீடெயில்ஸ் சேகரிக்க வேண்டி இருக்கு. வரேங்க ராகுல்!"
தென்றல்வாணன் விடைப்பெற்று போன உடன், கலைவாணியும் வாக்கிங் போவதாக சொல்லிவிட்டு அங்கே இருந்து சென்றாள். அது வரைக்கும் தள்ளி நின்றுக் கொண்டிருந்த ஐஸ்வர்யா இப்போது ராகுல் பக்கத்தில் வந்தாள்.
"இந்த வினாயக் பத்தி என்ன நினைக்குறீங்க ராகுல்?"
"ஸ்பெசிஃபிக்கா எதுவும் சொல்ல தெரியலை ஐஸ். எதுக்கு கேட்குற?"
"உங்க தங்கை அவரை விழுந்து விழுந்து கவனிக்குறதை பார்த்தா அவளுக்கு அவர் மேலே ஸ்பெஷல் இன்ட்ரஸ்ட் இருக்கும்னு எனக்கு தோணுது. வினாயக் சரியானவரா இருந்தா அது தப்பில்லை. எனக்கு என்னவோ வினாயக் மேட் சைன்டிஸ்ட் மாதிரின்னு தோணுது!"
"பைத்தியமா? அப்படியா உனக்கு தோணுது?"
"நீங்களே சொல்லுங்க, அவர் வாயை திறந்து பேசினா டிவைஸ், எலக்ட்ரானிக்ஸ், கரண்ட் அது