🌼🌸❀✿🌷
ஜாகிங் செய்துக் கொண்டிருந்த சக்தி, எதிர் திசையின் பக்கவாட்டில் இருந்து திடீரென்று வந்த யார் மீதோ மோதிக் கொண்டு நின்றாள்!
"என்ன இப்படி கண்ணு மண்ணு தெரியாம வரீங்க?" சக்தி கோபத்தில் பொரிந்தாள்.
அவளின் எதிரில் நிற்பவன் தெளிவில்லாமல் கண்களை கசக்கி கொள்வது தெரிந்தது. கூர்ந்து கவனித்தாள். உடனே அடையாளம் கண்டுக் கொண்டாள்.
"வினாயக் நீங்களா? என்ன திரும்ப இங்கே? வேற ஏதாவது எக்ஸ்பெரிமென்டா?” சக்தி அவனிடம் கேள்விகளை அடுக்கினாள்.
"சக்தி மேடம்!" வினாயக்கின் குரல் தெளிவில்லாமல் ஒலித்தது.
"என்ன வினாயக், வித்தியாசமா தெரியுறீங்க??? உடம்பு சரியில்லையா?"
"சக்தி மேடம் இன்னைக்கு டேட் என்ன?"
"டேட்டா? டென், ஆகஸ்ட் டென். ஏன் கேட்குறீங்க?"
"டென்னா? அப்படின்னா திரும்பவுமா? எனக்கு ஒன்னும் புரியலை!" வினாயக் குழப்பத்துடன் பேசினான்!
"எனக்கும் நீங்க சொல்றது எதுவும் புரியலை. ஆர் யூ ஆல் ரைட்?" சக்தி அக்கறையுடன் வினாயக்கிடம் கேட்டப் போது அவர்கள் இருவரையும் தாண்டி ஒரு கார் போனது. சில அடிகள் முன்னே சென்று சடன் ப்ரேக் போடப் பட்டதால் கிறீச்சிட்டு நின்றது அந்த கார்.
அந்த காரை பார்த்த உடனேயே யாருடைய கார் என்பது சக்திக்கு புரிந்துப் போனது. அதனால் காரில் இருந்து இறங்கிய டாக்டர் சாந்ததுரையைப் பார்த்து அவள் பெரிதாக ஆச்சர்யப்