படவில்லை!
"சக்தி, என்ன செய்துட்டு இருக்கீங்க?" சாந்ததுரை கேட்டுக் கொண்டே அவளின் அருகே வந்தான்!
சக்தி அவனுக்கு பதில் சொல்லாமல் வினாயக்கிடம் பேசினாள்.
"என்ன ஆச்சு வினாயக். எதனால இப்படி வித்தியாசமா இருக்கீங்க?"
"நத்திங் சக்தி. நான் போகனும். பை மேடம்!" வினாயக் வேக வேகமான நடையுடன் அங்கிருந்து சென்றான்.
"என்ன ஆச்சு இவருக்கு?" வினாயக் போன பக்கம் பார்த்து மெதுவாக முனுமுனுத்தாள் சக்தி.
"அதே தான் நானும் கேட்குறேன். எதுக்கு ஆபத்தை விலைக் கொடுத்து வாங்குறீங்க சக்தி. இந்த பக்கம் பாதுகாப்பானது இல்லை. எதிர் பக்கமா ஜாகிங் போனீங்கனா மக்கள் நடமாட்டம் இருக்கும்," என்றான் சாந்ததுரை.
"SD என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்!"
"இப்படி பேசுறதை தான் எங்க ஊருல தலைக்கனம், திமிருன்னு சொல்வாங்க!"
"முதல்ல அந்த ஊரை மாத்துங்க!" சுள்ளென்று அவனுக்கு பதில் சொன்னாள் சக்தி.
"ஓகே, ஓகே! நீங்க எக்ஸ் போலீஸ். உங்களுக்கு பயம் இல்லை. ஆனால் எனக்கு உங்களை இப்படி பார்க்கும் போதெல்லாம் திக்கு திக்குன்னு இருக்கு. அதான் போலீஸ் வேலையை ரிசைன் செய்துட்டீங்களே, இனிமேலாவது ரிஸ்க் இல்லாம வாழலாமே?"
"எதுக்கு?"
"எனக்காக தான்! வேற எதுக்கு!" ஒரு ரொமான்டிக் புன்னகைய்டோன் சொன்னான் சாந்ததுரை!
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்