விசயமாக லண்டன் செல்வதாக சொல்ல அவர்களும் மகிழ்ந்தார்கள், சரியான நேரத்தில் கார் வந்தது, அதில் ஏறிக் கொண்டான் அந்த வண்டி நேராக ஹரிணியின் அப்பார்ட்மெண்ட்டில் சென்று நின்றது. ஹரிணி வருவதற்குள் தருணே அவளை தேடிச் சென்றான்.
புடவையிலும் குர்தா சல்வார் என பார்த்தவனுக்கு இப்போது அவள் ஜீன்ஸ் டாப்ஸில் இருக்கவே ஒரு நொடி சொக்கித்தான் போனான்
”ஓ லேட்டாயிடுச்சா தருண் சாரி சாரி எப்படி தூங்கினே்னு தெரியலை அலாரம் அடிச்சும் எழ முடியலை சாரி”
”இட்ஸ் ஓகே ஹரிணி நான் உனக்கு ஹெல்ப் பண்ணலாமா“
”நோ நோ எல்லாம் முடிஞ்சிடுச்சி ஒண்ணே ஒண்ணுதான் பாக்கி” என சொல்லிவிட்டு தான் கொண்டு செல்லும் ட்ராவல் பேக்கில் இளங்கோவின் சிறிய போட்டோவை வைத்தாள், அதைக்கண்டு திடுக்கிட்டான் தருண் ஆனாலும் அதைப்பற்றி அவன் பேச எத்தனித்தான் ஆனால் ஹரிணி தவறாக நினைத்துவிடுவாளோ என்ற எண்ணத்தில் அமைதி காத்தான். ஆனால் ஹரிணியே பேசினாள்
”என்ன தருண் அப்படி பார்க்கறீங்க இளங்கோ போட்டோ எதுக்குன்னா, நான் எந்த ஊருக்கு போனாலும் இளங்கோ என்கூடவே வருவான், அவன் இல்லைன்னாலும் இந்த போட்டோவை எடுத்து வைச்சிக்குவேன், அவனே என்கூட இருக்கற மாதிரி ஒரு ப்லீங் வரும், என்னதான் அவனை மறக்க நினைச்சாலும் சில சமயம் அவனோட நினைவுகள் வேணும்னு தோணுது, என்ன செய்றது இப்படியே பழகிடுச்சி போலாமா”
”ம் போலாம்” என அவளின் லக்கேஜை எடுத்துக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு சென்று வண்டி ஏற அதுவும் நேரத்தோடு ஏர்ப்போர்ட்டில் அவர்களை இறக்கிவிட்டது. முதல் முறை ஏர்போர்ட் பார்த்தான், அசந்துவிட்டான் சிலையாக நின்றவனைக் கண்ட ஹரிணியோ
”தருண் வாட் ஹாப்பண்டு”