(Reading time: 31 - 62 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

அண்ணா என்ன அண்ணா அந்த பொண்ணு உங்களை அத்தான்னு கூப்பிடுது எப்படிஎன சந்தேகமாக கேட்டான் அதற்கு ரிஷி சிறிதும் அதிர்ச்சியடையாமல் அவனிடம்

  

டேய் எனக்கு எப்படிடா தெரியும்

  

உங்களுக்கு அத்தை பொண்ணு மாமா பொண்ணுன்னு யாராவது இருக்காங்களா

  

இருக்கலாம்

  

அப்படின்னா அதுல ஒண்ணாதான் இருக்குமோ” என கேள்வியோட கேட்ட அர்ஜூனிடம்

  

ம் சரி வா கேட்கலாம்என்றான் ரிஷி

  

அண்ணா எல்லாத்தையும் தெருவுல தான் கேட்பீங்களா வாங்க வீட்டுக்குள்ளே கூட்டிட்டு போய் விசாரிக்கலாம்

  

சரி வாஎன அவளிடம் இருவரும் வந்தனர். இவர்கள் இருவரும் அடிக்கடி தனியாக சென்று ஏதேதோ பேசுவதை கண்டவள் மனதில் திக்திக்கென்றது. அவர்கள் வருவதை கண்டவள்

  

வா நந்தினி.... உள்ளே வாஎன ரிஷி விட்டு விட்டு கூற

  

அர்ஜூன் தலையில் அடித்துக்கொண்டு

  

அம்மா தாயே உள்ளே வா ரோட்ல எதுக்கு பேசிக்கிட்டு, இவ்ளோதான் உன் லக்கேஜா கிளம்பு உள்ளே போஎன அவளுடைய லக்கேஜை தூக்கிக்கொண்டு உள்ளே வேகமாக சென்றான் அர்ஜூன். ரிஷியும் தன்னுடைய ஜீப்பில் ஏறி அதை ஸ்டார்ட் செய்யவும் வாட்ச்மேன் கேட் திறக்கவும் ரிஷி தன் வண்டியை ஷெட்டில் பார்க் செய்ய சென்றான்.

  

தனியாக விடப்பட்ட நந்தினி மெதுவாக உள்ளே வந்தாள். அந்த வீடு சே சே மாளிகை மிகவும்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.