(Reading time: 7 - 13 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

  

"ஆமாம். அவர் பேரு தென்றல்வாணன்," என்றாள் ப்ரியம்வதா!

  

சத்யாவின் மனசுக்குள் அபாய சைரன் ஒலித்தது! ஆனால் சக்தி அதை கவனிக்கும் நிலையில் இல்லை.

  

"எந்த போலீஸ்ங்குறது எல்லாம் இம்பார்டன்ட் இல்லை. மேலே என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க," என ப்ரியம்வதாவிடம் சொன்னாள் சக்தி

  

"அதுக்கு அப்புறம் கொஞ்ச நாள் எல்லாம் நார்மலா இருந்துச்சு. நேத்து திடீர்னு வினாயக் திரும்ப காணாம போயிட்டார்!" ப்ரியம்வதா நடந்ததை விவரித்தாள்.

  

🌼🌸❀✿🌷

   

காலை ப்ரேக்ஃபாஸ்ட் நேரத்திற்கு முன்பே வினாயக்கை தேடி அவுட் ஹவுஸிற்குப் சென்றாள் ப்ரியம்வதா. அங்கே வீடு திறந்து இருந்தது. ஆனால் வினாயக்கை எங்கேயும் காணவில்லை. விடி காலை நேரங்களில் அவனுடைய புது எலக்ட்ரானிக் ஐட்டம்களை ஃபீல்ட் டெஸ்ட் செய்கிறேன் என்றுப் போவது வினாயக்கின் வாடிக்கை. அதனால் ப்ரியம்வதா அதிகம் கவலைப் படவில்லை. கதவை மூடி வைத்து விட்டு வீடு திரும்பினாள்.

  

மதியத்திற்கு மேலும் வினாயக் வீடு திரும்பிய அறிகுறி இல்லாமல் இருக்கவும் ப்ரியம்வதாவிற்கு குழப்பமாக இருந்தது. கலைவாணியிடம் வினாயக்கை காணவில்லை என்று சொல்லி கவலைப் பட்டாள்.

  

"திரும்ப காணுமா? இப்போ எங்கே போனாரு?" என்றாள் கலைவாணி!

  

"தெரியலைம்மா!"

  

"முன்னாடி மாதிரி எங்கேயாவது மயக்கம் போட்டு இருப்பாரோ?"

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.