(Reading time: 7 - 13 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

"வினாயக் எங்கே ப்ரியா? அவரை தேடி போலீஸ் வந்திருக்கு!"

  

"போலீஸா, எதுக்கு?" ப்ரியம்வதா அதிர்ச்சியுடன் வினவினாள்!

  

"தெரியலை! அவுட் ஹவுஸ்ல வினாயக் இல்லைன்னு இங்கே வந்ததா இன்ஸ்பெக்டர் சொன்னார்."

  

ப்ரியம்வதா ராகுலிடம் மேலே பேசாமல், வாசல் நோக்கி சென்றாள். கலைவாணியும் அவளின் பின்னே சென்றாள்.

  

"என்ன ராகுல் எப்போ பார் உங்க வீட்டுக்கு போலீஸ் வந்துட்டே இருக்கு? என் அண்ணன் வரும் போது இப்படி இருந்தா நல்லாவா இருக்கும்?" என்றாள் ஐஸ்வர்யா!

  

"எல்லாம் அந்த வினாயக்கால வந்தது ஐஸ். எல்லாத்தையும் நான் சரி செய்றேன். நீ கவலைப் படாதே," என சொல்லி அவளை அமைதிப் படுத்தினான் ராகுல்.

  

வாசல் கதவோரம் வந்து எட்டிப் பார்த்தாள் ப்ரியம்வதா. அங்கே இன்ஸ்பெக்டர் தேன் பொறுமை இல்லாமல் நின்றிருந்தான்.

  

"இன்ஸ்பெக்டர், எதுக்கு வினாயக்கை தேடுறீங்க? அன்னைக்கே அவரை தொல்லை செய்ய வேண்டாம்னு சொன்னேனே?" ப்ரியம்வதா தென்றல்வாணனை முந்திக் கொண்டு கேள்விகளை எய்தாள்.

  

"அன்னைக்கு நான் சொன்ன மாதிரியே இன்னைக்கும் திரும்ப ஒரு இன்சிடன்ட் நடந்திருக்கு. அதைப் பத்தி அவர் கிட்ட கேட்க வந்தேன்," என்றான் தென்றல்வாணன் எரிச்சலுடன்!

  

"திரும்ப நடந்துச்சா? என்ன?" என கலைவாணி இப்போது வினவினாள்!

  

"இப்போ எங்கே இருந்தோ கத்தியா வந்திருக்கு. ஒரு மெஷின் தானா வந்து அப்படி கத்தியை எரிஞ்சதுன்னு சில பேர் சொல்றாங்க. பத்து கத்தி கிடைச்சிருக்கு ஆனால் அந்த மெஷினை

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.