"அதான் எனக்கும் பயமா இருக்கும்மா."
"பயப்படாதே ப்ரியா. நான் நம்ம எஸ்டேட்ல வேலை செய்றவங்களை தேட சொல்றேன். உன்னோட வேலை செய்தப்போ அவருக்கு இப்படி ஏதாவது இருந்துதா?"
"இல்லைம்மா. ஆஃபீஸ்ல அவர் இப்படி இருந்ததில்லை. சென்னையிலேயும் இல்லைன்னு அவர் சொன்னார். இங்கே ஏன்னு எனக்குப் புரியலை. மூணு வேளையும் நம்ம வீட்டு சமையல் தான் அவருக்கும். அதனால சாப்பாடுல எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை!"
"சென்னைல இல்லைன்னு வினாயக் தானே சொன்னார். உண்மைன்னு நமக்கு எப்படி தெரியும்?"
"வினாயக் என் கிட்ட எதையும் மறைக்க மாட்டார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. இது வேற என்னவோ. அவருக்கு உடம்பு சரியில்லையோன்னு இருக்கு. அதை செய்றேன், இதை செய்றேன்னு நேரத்துக்கு தூங்குறது இல்லை. நம்ம வீட்டுல சாப்பிடுறதால சாப்பாடு டைமுக்கு நடக்குது. மத்தபடி அவர் அவரோட எலக்ட்ரானிக்ஸ் உலகத்திலேயே இருக்கார்."
கலைவாணி ப்ரியம்வதாவை யோசனையாகப் பார்த்தாள்.
"வினாயக்குக்கு நீ சொல்றதுப் போல என்னமோ ஹெல்த் ப்ராப்ளம் இருக்கும் போலருக்கு ப்ரியா. இந்த தடவை அவர் வந்த உடனே கட்டாயப் படுத்தியாவது ஃபுல் செக்கப் செய்ய சொல்லனும்." கலைவாணி குரலில் இருந்த மாற்றம் ப்ரியம்வதாவிற்கு புரிந்தது. வினாயக் பற்றிய கவலையில் இருந்ததால் அதை அப்போதைக்கு உதாசீனப் படுத்தினாள். அவளுக்கு அப்போதிருந்த மனநிலையில் வினாயக் நலமுடன் கண்ணில் பட்டால் போதும் என்று இருந்தது.
மாலை போய், இருட்ட தொடங்கியப் பிறகும் வினாயக் பற்றி ஒரு விபரமும் இல்லை! ப்ரியம்வதாவின் கவலை அதிகமாகி கொண்டே போனது.
"என்ன ஆச்சு ப்ரியம்வதா எதுக்கு டல்லா இருக்க?" ஐஸ்வர்யாவே ப்ரியம்வதாவை கவனித்து