விசாரித்தாள்.
அக்கறையுடன் விசாரித்ததாக தான் தோன்றியது! ஆனால் ப்ரியம்வதாவிற்கு அதெல்லாம் நடிப்பு என்ற எண்ணம் எதனாலோ எழுந்தது. அவளுக்கு எப்போதுமே ஐஸ்வர்யாவுடன் பேச பிடிக்காது. என்ன சொன்னாலும் அதற்கு மாற்று கருத்தாக எதையாவது சொல்பவள் ஐஸ்வர்யா.
அதனால் வினாயக் பற்றி எதுவும் சொல்லாமல், ‘ஒன்றுமில்லை’ என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
ஆனால் ஐஸ்வர்யா அவளை விடுவதாக இல்லை.
"எதையோ மனசுல வச்சு குழம்புறேன்னு நினைக்கிறேன். நான் உனக்கு சீக்கிரமே அண்ணி ஆக போறேன். உனக்கு நல்ல ஃபிரென்ட் மாதிரி. என் கிட்ட தாராளமா மனசு விட்டு நீ பேசலாம்!"
ப்ரியம்வதா அப்போதும் வாயைத் திறக்கவில்லை.
"ப்ரியா, ஐஸ்வர்யா கேட்குறாளே, சொல்றது தானே!" கலைவாணியே ஐஸ்வர்யாவிடம் வினாயக்கை காலையில் இருந்து காணவில்லை என்று விபரம் பகிர்ந்தாள்.
"என்னது, அவரை திரும்ப காணுமா? ஏற்கனவே ஒரு தடவை இது தானே நடந்துச்சு?" என்றாள் ஐஸ்வர்யா அதிர்ச்சியுடன்!
"ஆமா. அதான் ப்ரியா குழம்பி போய் இருக்கா," என்றாள் கலைவாணி!
"நான் சொல்றேன்னு நீங்க தப்பா எடுத்துக்காதீங்க." பூடகமாக பேச்சை ஆரம்பித்தாள் ஐஸ்வர்யா.
ஆனால், அவள் தொடர்ந்துப் பேசுவதற்கு முன், ராகுல் அங்கே பரபரப்புடன் வந்தான்.