“இதென்ன கேள்வி“
”சொல்லு நீயாரு”
”ஆண்டாள் நாச்சியா”
”நான் பேரையா கேட்டேன்“
”வேற என்ன சொல்ல சொல்ற”
”உன் வரலாறு சொல்லு”
”ஏன் உனக்குத் தெரியாதா”
”சொல்லுங்கறேன்ல”
”என் அப்பா அம்மா யார்ன்னு தெரியாது, அநாதை ஆசிரமத்திலதான் நான் வளர்ந்தேன், ஆளானேன், என்னை ஒரு மிலிட்டிரி ஆபிசர் தத்து எடுத்து வளர்த்து ஆளாக்கி, இதோ உனக்கு கல்யாணம் செய்து வைச்சாரு போதுமா”
”ம் போதும்“
”இதை ஏன் கேட்ட”
”விசயம் இருக்கு என்னோட அப்பா அம்மா யாருன்னு எனக்குத் தெரியாது, நானும் அநாதை ஆசிரமத்திலதான் வளர்ந்தேன் என்னை தத்து எடுக்க யாரும் வரலை, நானே கஷ்டப்பட்டு வளர்ந்து படிச்சி இந்த லெவலுக்கு வந்தேன், என்னோட திறமையை பாராட்டி நான் உன் மேல வைச்சிருக்கற காதலை மதிச்சி உன் அப்பா உன்னை எனக்கு கல்யாணம் செய்து வைச்சாரு”
”இதெல்லாம் தெரிஞ்ச கதைதானே”