”இதுவரைக்கும் நாம கலெக்ட் பண்ண டீடெய்ல்ஸ் பத்தாது அகத்தியா, இன்னும் வேணும் சம்திங் ஏதோ ஒண்ணு மிஸ் ஆகியிருக்கு“ என நாச்சியா சொல்ல அதற்கு
”ப்ச் அகத்தியன் ஆண்டாள் நாச்சியா இரண்டு பேரும் மர்மமான முறையில இறந்துட்டாங்க, அந்த மர்மத்தை நாம கண்டுபிடிக்கனும், இரண்டு ஆளுங்க செத்ததுக்கு நாம இவ்ளோ கஷ்டப்படனுமா” என அகத்தியன் சொல்ல அதற்கு கமிஷனரோ
”சாதாரண ஆளுங்க இல்லை அகத்தியா, அவங்க பெரியாளுங்க ஊருக்காக பல நன்மைகள் செய்தவங்க, இப்ப வரைக்கும் அந்த ஊர்ல இவங்களோட சிலைகள் இருக்குன்னா பார்த்துக்கயேன்”
”ப்ச் என்னவோ போங்க” என அலுத்துக் கொண்ட அகத்தியனிடம்
”இந்த கேஸ் எனக்கு ரொம்ப பர்சனல் அகத்தியா“ என கமிசனர் சொல்ல அதற்கு அகத்தியன்
”ஏன் உங்க ஊர் கேஸ்ங்கறதாலயா“
”ம் கூடவே என் சொந்த கேஸ் ஆச்சே“
”சொந்த கேஸா எப்படி சார்”
”என் தாத்தா அங்கமுத்து சாகறப்ப கூட என்கிட்ட அகத்தியனுக்கும் நாச்சியாவுக்கும் என்ன நடந்ததுன்னு கண்டுபிடின்னு சொல்லிட்டு செத்தாரு, அவரோட கடைசி ஆசையை நான் நிறைவேத்தனும்னு ஆசைப்படறேன்” என கமிசனர் சொல்ல அதற்கு அகத்தியன்
“உங்க ஆசையை நாங்க நிறைவேத்தினா நீங்க பேர் புகழ் வாங்கிட்டு போவீங்க அதானே“
”அதான் இல்லை என் தாத்தாவுக்காகத்தான் இதெல்லாம் செய்றேன்“