செலவுகளை கண்டுக் கொள்ளவில்லை. மாலை நேரம் அவன் அசந்த நேரம் அவனிடம் இருந்து டெபிட் கார்டை திருடி பதுக்கி வைத்தாள். அவனோ டெபிட் கார்டு இல்லாமல் அதிர்ந்து அனைத்து இடத்திலும் தேடிப் பார்த்து பதறியபடியே ஹரிணியிடம் வந்தான்
”ஹரிணி ஹரிணி”
”என்னாச்சி தருண் ஏன் இப்படி பதட்டமாக இருக்க”
”ஹரிணி நீ தந்த டெபிட் கார்டு காணலை”
”வாட் என்ன தருண் இப்படி சொல்றீங்க“
”ஆமாம் ஹரிணி, நான் பத்திரமாதான் வைச்சிருந்தேன் எப்படி அது மிஸ் ஆச்சின்னு தெரியலை முதல்ல அதை ப்ளாக் பண்ணனும் ஹரிணி“
”அந்த வேலையை நான் பார்த்துக்கிறேன்”
”உன்கிட்ட கேஷா இருக்கா ஹரிணி”
”இல்லையே எல்லாம் கார்டுல இருக்கறதுதான், இன்னும் சேலரி வேற போடலையே ஏன் என்ன விசயம்”
”இல்லை முக்கால் வாசி செலவுக்கான பணத்தை நான் கார்டுல இருந்து எடுத்துக்கிட்டேன், இன்னும் சில செலவுகள் இருக்கு அதுக்கு பணம் தேவைப்படுது அதான் பார்க்கிறேன்”
”சாரி தருண் என்கிட்ட இப்ப கேஷ் இல்லையே”
”ஓகே நோ ப்ராப்ளம் நான் அரேன்ஜ்டு பண்ணிக்கிறேன், நீ முதல்ல அந்த கார்டை ப்ளாக் செய்“
”இதோ இப்பவே” என சொல்ல தருணோ பலமாக யோசித்தபடியே அவளை விட்டுச் சென்றான்.