அவனின் புன்னகையை பார்த்த உடன், ப்ரியம்வதாவிற்கே அவள் நடந்துக் கொண்ட விதம் அசிங்கமாக இருந்தது. அதை மறைத்துக் கொண்டு பதிலுக்கு அவனைப் போலவே நட்புடன் புன்னகை புரிந்தாள்.
இதைக் கவனித்த கலைவாணி, ராகுல், ஐஸ்வர்யா அனைவரின் முகமும் மலர்ந்தது.
“மதியூர் பொங்கல் திருவிழா கலக்கலா இருக்கும்னு ஐஸ்வர்யா சொன்னா. இந்த மாதிரி கிராமத்து திருவிழா எதையும் நான் பார்த்ததே கிடையாது. என்ன தான் செய்றாங்கன்னு பார்ப்போமேன்னு கிளம்பி வந்தேன்.” ரொம்ப நாள் தோழியிடம் பேசுவதுப் போல ப்ரியம்வதாவிடம் தகவல் பகிர்ந்தான் ஸ்ரீனிவாஸ்.
“நானும் கேள்வி தான் பட்ருக்கேன். இது வரைக்கும் பார்த்ததில்லை. எனக்கு அதுல எல்லாம் பெரிய இன்ட்ரஸ்டும் இல்லை.” ப்ரியம்வதா மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கவும் இல்லை, அதை பற்றி கவலைப் படவும் இல்லை. ஸ்ரீனிவாஸுடன் சாதாரணமாக பேசினாள்.
ஆனால் மற்றவர்கள் அதை சாதரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவர்கள் முகம் தெளிவாக காட்டியது. கலைவாணியின் முகத்தில் நிம்மதி பரவியது. ஐஸ்வர்யா ராகுல் பக்கம் வெற்றிப் பார்வை ஒன்றை பகிர்ந்துக் கொண்டாள்.
“இந்த வருஷம் நீங்களும் எங்க கூட திருவிழாக்கு வாங்களேன். எல்லாமே புது எக்ஸ்பீரியன்ஸ் தான,” என்றான் ஸ்ரீனிவாஸ்.
“பார்ப்போம். அன்னைக்கு என்ன தோணுதோ அதை செய்றேன்.” மற்றவர்கள் அமைதியாக இருப்பது ப்ரியம்வதாவிற்கு அப்போது தான் உரைத்தது. சுற்றிப் பார்த்தவள், மூன்று பேரின் முகத்தை வைத்தே அவர்களுக்குள் ஓடும் எண்ணத்தை புரிந்துக் கொண்டாள். அதற்கு மேலே அவளுக்கு ஸ்ரீனிவாஸுடன் பேச ஆர்வம் இருக்கவில்லை.
“நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் என் ஃப்ரென்ட்க்கு ஃபோன் செய்யப் போறேன்,” என்ற ப்ரியம்வதா