வேளை அவர்கள் இரண்டுப் பேருமே அவளைப் பார்க்கவில்லை.
இந்த ஐஸ்வர்யாக்கு எவ்வளவு கெட்ட புத்தி!
ஸ்ரீனிவாஸ் பரவாயில்லை நல்லவனாக இருக்கிறான்.
தொடர்ந்து நடக்க பிடிக்காமல், வீட்டிற்கு திரும்பினாள் ப்ரியம்வதா. அங்கே கலைவாணி அவளுக்காக கவலையுடன் காத்துக் கொண்டிருந்தாள்.
“எங்கே போயிட்ட ப்ரியா? உன் ஃப்ரென்டோட காத்து உனக்கு அடிச்சிடுசான்னு பயந்துட்டேன்!”
“எதுக்கும்மா வினாயக் பத்தி இப்போ தேவை இல்லாம பேசுறீங்க? இங்கே வீட்டுல நடக்குறது உங்களுக்கு தெரிய மாட்டேங்குது,” என்றாள் ப்ரியம்வதா எரிச்சலுடன்!
“என்ன எனக்கு தெரியலை,” என்றாள் கலைவாணி ஆர்வத்துடன்!
சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்டாள் ப்ரியம்வதா. இருந்தாலும் குரலை குறைத்து அமைதியானக் குரலில் ஐஸ்வர்யா – ஸ்ரீனிவாஸ் உரையாடலை பகிர்ந்தாள். அவள் எதிர்பார்த்ததுப் போல கலைவாணி கோபப்படவில்லை.
“நல்லதை தான பேசி இருக்காங்க. என்ன தப்பு இருக்கு?” என்றாள் கலைவாணி.
“என்னம்மா இப்படி கேட்குறீங்க? ஸ்ரீனிவாஸ் கூட சரியில்லைன்னு சொன்னார்!”
“அது அவரோட நல்ல குணத்தைக் காட்டுது. உனக்கு வயசாகிட்டே போகுது ப்ரியா. உனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா எனக்கு நிம்மதியா இருக்கும்.”
ப்ரியம்வதா வினாயக்கை யோசித்தாள். எப்படி அம்மாவிடம் சொல்வது?
“அந்த வினாயக்கை முதல்ல பார்த்தப்போ அவன் உனக்கு சரியா இருப்பானோன்னு யோசித்தேன்,” என கலைவாணி சொல்லவும், ப்ரியம்வதாவிற்கு அத்ரிசியாக இருந்தது!