“உன்னை இந்த ஊர் திருவிழா பார்க்கவா வர சொன்னேன்?? அந்த ராங்கிக்காரி ப்ரியம்வதா கிட்ட பேசி, பழகி கல்யாணம் செய்துக்கோன்னு சொன்னேனா இல்லையா?”
பேசுவது யார் என்று பார்க்காமலே அது ஐஸ்வர்யாவின் குரல் என்பது ப்ரியம்வதாவிற்குப் புரிந்தது. அவள் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதையும் அவளால் யூகிக்க முடிந்தது. தொடர்ந்து ஒலித்த பதில் ப்ரியம்வதாவின் சந்தேகத்தையும் உறுதி செய்தது.
“ஐஸ்வர்யா!” ஸ்ரீனிவாஸின் குரல் அதிகாரத்துடன் கேட்டது.
“எனக்கு இந்த மாதிரி பேச்சு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும். அந்தப் பொண்ண பார்த்தா நல்ல பொண்ணா இருக்கா. அவளுக்கு என்னை பிடிச்சா இதைப் பத்தி பேசலாம். மத்தபடி பேசி மயக்குற பிஸ்னஸ் எல்லாம் எனக்கு சரியா வராது,” என்று தொடர்ந்து சொன்னான் ஸ்ரீனிவாஸ்.
“பைத்தியம் மாதிரி பேசாதே ஸ்ரீனி. அவளை கல்யாணம் செய்தா அவக் கூட வர கோடிக்கணக்கான சொத்து உனக்கு தான். அதை யோசிச்சு பார்!”
“ச்சே, என்ன பேச்சும்மா இது? நீ என் சொந்த தங்கச்சி இல்லை. அதனால தப்பிச்ச. இல்லைனா பளார்னு அறைஞ்சிருப்பேன். அவ யாரு? உன் வருங்கால கணவனோட தங்கை. அவ சந்தோஷமா இருக்கனும்னு யோசி. அது தான் உனக்கும் நல்லது. இதுக்கு மேல இங்கே தங்கி இருக்க எனக்கு சுத்தமா பிடிக்கலை. நான் உடனே கிளம்புறேன். திரும்பவும் சொல்றேன் ஐஸ்வர்யா, ராகுல் ஃபேமிலி எல்லோரும் நல்லவங்களா தெரியுறாங்க. இந்த மாதிரி தப்பா யோசிச்சு, பேசி உன் வாழ்க்கையை நீயே நாசம் செய்துக்காதே!”
தொடர்ந்து காலடி சத்தம் கேட்டது!
ஸ்ரீனிவாஸ் அங்கே இருந்து போய் விட்டான் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள் ப்ரியம்வதா.
இப்படி அடர்த்தியான மரங்கள் மூடி இருப்பதால் இப்படியும் ஒரு நன்மை இருக்கிறதா? நல்ல