“எதுக்குண்ணா நான் பார்த்துக்கிறேன், உங்க பாசமிகு அப்பா உங்களை வரசொல்லியிருக்காரு நீங்க போகலைன்னா எனக்கு போன் பண்ணி திட்டுவாரு, நீங்க போங்கண்ணா நான் என் வேலையை முடிச்சிட்டு வந்துடறேன்” என சொல்லவும் கருணாவும்
”ஆமாம்ணா வாங்க போலாம் நீங்க வரலைன்னா பெரியப்பா திட்டுவாரு” என சொல்ல ரிஷியும் அர்ஜூனிடம்
”நீ சாயங்காலம் வீட்டுக்கு வந்துடு நாம ஒண்ணா போலாம்”
“எங்கண்ணா போறோம்”
“சும்மா வெளிய” என தடுமாறி பேசினான் ரிஷி
”இல்லைண்ணா இன்னிக்கு விட்டுடுங்க எனக்கு நிறைய வேலைகள் இருக்கு”
“நானும் உனக்கு உதவி செய்றேன்”
”பரவாயில்லைண்ணா நானே பார்த்துக்கிறேன் அதோட சொந்த தங்கச்சிக்கு செய்ற வேலைக்கு எதுக்கு மத்தவங்க உதவி வேணாமே”
“நான் என்ன மத்தவங்களா”
“பின்ன யார்னா நீங்க”
என கேட்க அந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல முடியாமல் தடுமாறிய ரிஷியை கண்டு சிரித்த அர்ஜூன் வேண்டுமென்றே வராத போன் கால் வந்ததாக பாவ்லா செய்து தன் மொபைல் போனை காதில் வைத்துக்கொண்டு
”ஹலோ”