”ரிஷி” அந்த குரலில் தன்நிலை பெற்றவன் திரும்பி தாத்தாவை பார்த்துவிட்டு அவரிடம் சென்றான்
”தாத்தா”
“உட்காரு” என சொல்ல அவனும் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான்
”என்னடா ஆச்சி உனக்கு உடம்பு சரியில்லையா”
”ஆமாம் தாத்தா தலைவலி”
“மீட்டிங் போனா போகுது, இது போனா இன்னொன்னு உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லியிருந்தா நான் உன்னை மீட்டிங்குக்கு போக சொல்லியிருக்க மாட்டேன்ல” என்றார் அப்பா.
”அப்படியில்லைப்பா அங்க போறவரைக்கும் நல்லாதான் இருந்தேன் திடீர்னு தலைவலி அதான்” என அவன் மழுப்பலாக சொல்ல தாத்தா அவனிடம்
”உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் ரிஷி” என சொல்லிவிட்டு அவனது முகத்தையே உன்னிப்பாக பார்த்தார்.
சாதாரண நாட்கள் என்றால் ரிஷி கல்யாணம் என்றதும் ஓடுவான், சிலநேரம் எதிர்த்து பேசி வேண்டாம் என்பான் ஆனால் இன்றோ அவனின் அமைதி எதையோ குறிப்பதாக இருக்கவே அவர் மீண்டும் அவனிடம்
”ரிஷி உன்கிட்ட தான் பேசறேன் உன் கல்யாணத்தைப்பத்தி நான் முடிவு பண்ணலாம்னு இருக்கேன்” என சொல்ல ரிஷி உடனே
”சரிங்க தாத்தா அதுக்கென்ன தாராளமா செய்ங்க” என்றான். அதைக்கேட்டு தாத்தாவும் அவனது