போல மரியாதை கொடுக்காமல் நடந்துக் கொள்ள அவனுக்கே மனம் வரவில்லை! அதனால் வேண்டா வெறுப்பாக காஞ்சனா அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் சஞ்சீவ்.
“அத்தை சொல்றதை கேட்டுட்டே லைட்டா சாப்பிடுருங்க,” என்று சொல்லி, அவனுக்கு இட்லி எடுத்து தட்டில் வைத்துக் கொடுத்தாள் கீதா.
மறுத்து எதுவும் சொல்லாமல் வாங்கி கொண்டான் சஞ்சீவ்.
அவன் சாப்பிட தொடங்கும் வரை அமைதியாக இருந்த காஞ்சனா, பின் கண்மணி பக்கம் திரும்பினாள்.
“கண்மணி, உன் கிட்ட தான் முதல்ல கேட்கனும்... திரும்பவும் கேட்குறேன்... கடைசி தடவை கேட்குறேன்... சஞ்சீவ் வேற யாரையாவது கல்யாணம்...”
காஞ்சனாவை முழுவதும் பேசி முடிக்க விடாமல்,
“அச்சோ அத்தை, வேண்டாம் இந்த பேச்சே வேண்டாம்... அத்தான் முறைக்கிறதை பார்த்தா சாப்பிடாமல் கிளம்பிடுவார் போல இருக்கு! இந்த பேச்சை இதுக்கு மேல எடுக்கவே எடுக்காதீங்க,” என்றாள் கண்மணி.
“சரி, அப்போ பிரச்சனை இல்லை! சஞ்சீவ், நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி, எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு சம்மந்தம் வந்திருக்கு, நீ என்ன சொல்ற?” மகன் பக்கம் திரும்பி பார்த்துக் கேட்டாள் காஞ்சனா!
சஞ்சீவ் எப்படியும் மறுக்கப் போகிறான், என்ன சொல்லி மறுப்பான் என தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் மற்ற மூவரும் சஞ்சீவைப் பார்க்க, அவன்,
“நான் சொல்ல என்ன இருக்கு இதுல? உங்களுக்கு பிடிச்சா சரி தான் அம்மா,” என்றான்!
சஞ்சீவின் பதிலில் கீதா, ராஜீவ், கண்மணி மூவருமே திகைத்துப் போனார்கள்.