(Reading time: 7 - 13 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

“என்ன அத்தான்?” என்று ஏதோ சொலல் ஆரம்பித்த கண்மணியை பேச விடாமல்,

  

“இது தானே அம்மா நீங்க பேசனும்னு சொனனது? எனக்கு எந்த பொண்ணா இருந்தாலும் சரி தான்... நான் கிளம்புறேன்,” என்று சொல்லி எழுந்தவன், கீதாவிடம், “சாரி அண்ணி எனக்கு இட்லி போதும்,” எனவும் சொன்னான்!

  

கீதா அவன் காஞ்சனாவிடம் சொன்ன பதிலில் அதிர்ந்துப் போய் அமைதியாக இருக்க, காஞ்சனா, “சரிடா, அப்போ ரெண்டு நாள்ல பொண்ணு பார்க்க வரோம்னு சொல்லிடலாம் தானே?” என வினவினாள்!

  

“வேண்டாம் அம்மா... நான் பார்க்கனும்னு இல்லை. நீங்களும் அண்ணியும் பார்த்தாலே போதும்,” என்றான் சஞ்சீவ் மீண்டும் இயந்திரத்தனமாக!

  

“ஏன் நாங்களா கல்யாணம் செஞ்சுக்க போறோம்???”

  

“ப்ளீஸ் அம்மா, எனக்கு இப்போ மனசு முழுக்க பிஸ்னஸ்ல தான் இருக்கு... தொந்தரவு செய்யாதீங்க... உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருந்தால் சரி!”

  

“ஆனால் பொண்ணுக்கு உன்னை பிடிக்கனுமேடா... நான் சரியான டைம் கேட்டு சொல்றேன்...”

  

“ப்ச்... அம்மா...”

  

“வேற வழியே இல்லைடா சஞ்சீவ்...”

  

“சரி, என்னவோ செய்யுங்க... நான் கிளம்புறேன்,” என சொல்லி விட்டு அங்கிருந்து நடந்தான் சஞ்சீவ்.

  

அவனிடம் எப்படியாவது பேச வேண்டும் என்று நினைத்திருந்த கீதாவின் கண்ணில் சஞ்சீவ் மறந்து விட்டுப் போயிருந்த சன் க்ளாஸ் பட்டது!

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.