“அதான் எதுக்குன்னு கேட்கறேனே”
“இதப்பாருடா இது என் வாழ்க்கை பிரச்சனை இதுல நீ தலையிடாத. இன்னிக்கு நான் அவள்கிட்ட பேசறது ரொம்ப முக்கியம். சொன்னா புரிஞ்சிக்க ப்ளீஸ்டா” என கெஞ்சியவனிடம்
”சரிண்ணா போன்ல பேசலாம் ஆனா ஆளை காட்ட முடியாது”
“தேவையில்லை நீ நெம்பரை கொடு”
“நெம்பர் எதுக்கு”
“அதான் போன்ல பேசலாம்னு சொன்னியே”
“அது கான்ப்ரன்ஸ் கால்ல பேசலாம்னு சொன்னேன் லைன்லயே இருங்க நான் கனெக்ட் பண்றேன்”
”உன்னை வைச்சிக்கிட்டு எப்படி பேசறது”
“நான் எதுவும் பேசமாட்டேன் வாயே திறக்கலை போதுமா”
“முடியாது நான் தனியா பேசனும்”
“அப்ப முடியாதுண்ணா நான் போனை வைச்சிடறேன்”
“இரு இரு இருடா அவசரப்படாத சரி சரி போட்டுக்கொடு” என அமைதியானான்.
சில நொடிகளில் லைனில் வந்தாள் நந்தினி
”ஹலோ அத்தான்” என்றாள் ஆசையாக அவளது குரலை கேட்ட உடனே பாதி உயிர் திரும்பி வந்ததாக உணர்ந்தவன் அவளிடம் கோபமாக கத்தினான்