மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 20 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“ஏய் என்னையா அடிச்ச?” ஐஸ்வர்யா கோபத்துடன் ப்ரியம்வதா பக்கத்தில் வர, வினாயக் ப்ரியம்வதாவை பாதுகாப்பவன் போல அவளின் முன் வந்து நின்றான்.
“ஸாரிங்க ஐஸ்வர்யா. ப்ரியம்வதா எனக்காக தான் அபப்டி செய்தா. அவ சார்புல நான் சாரி சொல்றேன்!”
“போடா பைத்தியம்!” வினாயக்கிடம் கோபமாக ஐஸ்வர்யா கத்திக் கொண்டிருந்தப் போது ஸ்ரீனிவாஸ் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தான்.
“ஐஸ்வர்யா, என்ன இப்படி பிகேவ் செய்துட்டு இருக்க? அமைதியா பேசு,” என தங்கையை அடக்கினான் ஸ்ரீனிவாஸ்.
“அமைதியா பேசுறதா?! நீ வேற நடந்தது தெரியாம பேசிட்டு இருக்க,” என எரிந்து விழுந்தாள் ஐஸ்வர்யா.
“ஐஸ், கிளம்பலாமா???” ராகுல் கேட்டுக் கொண்டே வந்தான். நல்ல வேளையாக ராகுலின் வருகை ஐஸ்வர்யாவின் சீற்றத்தை மட்டுப்படுத்தியது.
“அஞ்சு நிமிஷம் வெளியே நின்னதுக்கே எப்படியோ இருக்கு ராகுல். எனக்கு இந்த வெயில் ஒத்துக்காதுன்னு நினைக்கிறேன். நான் வீட்டுலேயே இருக்கேனே. நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க,” என தனிந்தக் குரலில் கொஞ்சலாக ராகுலிடம் சொன்னாள் ஐஸ்வர்யா.
“என்ன ஐஸ் சொல்ற? நீ எப்படி தனியா இருக்க முடியும்? நானும் இங்கேயே உன் கூட இருக்கேன்,” என்றான் ராகுல் பதற்றத்துடன்!
“வீட்டுல நாலைஞ்சு வேலைக்காரங்க இருக்காங்களே ராகுல். அவங்க பார்த்துப்பாங்க. நீங்க வாங்க. அவ வீட்டுல இருந்து ரெஸ்ட் எடுக்கட்டும். அதன அவளுக்கும் நல்லது,” என்றான் ஸ்ரீனிவாஸ்.
ஐஸ்வர்யா மேலே எதுவும் பேசாமல் வீட்டுக்குள் திரும்பி நடந்தாள். ராகுல் வேறு வழி