மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 21 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“நான் கேட்ட மொபைல் கால்ஸ் ரெகார்ட் இன்னுமா வரலை?” இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் சிறிது கோபத்துடன் கான்ஸ்டபிளை கேட்டான்.
“கிடைச்சிருச்சு சார். பிரின்ட் அவுட் உங்க டேபிள்ல வச்சிருக்கேன்.” கான்ஸ்டபில் முகேஷ் டேபிளின் மேலே இருந்த பேப்பர்களை எடுத்து தென்றல்வாணனிடம் கொடுத்தார்.
“தேங்க்ஸ்!” பெயருக்கு சொல்லி விட்டு அந்த காகிதங்களில் பட்டியலிடப் பட்டிருந்த எண்களை கவனமாக பார்த்தான் தென்றல்வாணன்.
“சார்!“ அழைத்த முகேஷை மேலே பேச விடாமல் தடுத்தான் தென்றல்வாணன்.
“ஒரு பத்து நிமிஷம் கழிச்சு கூப்பிடுறேன் முகேஷ். இது ரொம்ப முக்கியம்!”
முகேஷ் அதற்கு மேலே எதுவும் சொல்லாமல் நகர்ந்து சென்றார். இரண்டு நிமிடங்கள் சென்றிருக்கும், தென்றல்வாணன் தேடிய எண் அவன் கண்ணில் பட்டது. உறுதி படுத்திக்கொள்ள வினாயக் முன்பு கொடுத்திருந்த தகவலுடன் சரி பார்த்தான். இரண்டும் மேட்ச் ஆனது.
“ஐ காட் இட்!” தென்றல்வாணன் சத்தமாக சொன்னான்.
கான்ஸ்டபில் வந்து எட்டிப் பார்த்தார்.
“முகேஷ், என்னவோ சொல்ல வந்தீங்களே இப்போ சொல்லுங்க.”
“சார், சப் இன்ஸ்பெக்டர் ஃபோன் செய்தார். அந்த வினாயக் இருக்க இடம் தெரிஞ்சிருச்சாம். உங்க கிட்ட சொல்ல சொன்னார்.”
“குட்! அபினவ் இப்போ எங்கே இருக்கான்?”
“கலைவாணி மேடமோட எஸ்டேட் வீட்டுல இருக்குறதா சொன்னார் சார்.”