மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 22 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
வினாயக்கின் ஃபோனை பிரவுஸ் செய்துக் கொண்டே பேசினான் தென்றல்வாணன்.
“நீங்க நிறைய ஃபோன் பேசுவீங்களா வினாயக்?”
“இல்லை இன்ஸ்பெக்டர். என்னை பொறுத்த வரைக்கும் இந்த மொபைல் மோர் ஆர் லெஸ் அலாரம் போல தான்,” என்றான் வினாயக்!
“பொதுவா ஃபோன் பேசிட்டு அந்த ரெக்கார்டை உங்க ஃபோன்ல இருந்து டெலீட் செய்திருவீங்களா என்ன?”
“இல்லையே. எதுக்கு டெலீட் செய்யனும்???”
“செய்திருக்கீங்களே! போன புதன் உங்க ஃபோன்ல இருந்து சந்திரமௌலி ஃபோனுக்கு கால் போயிருக்கு. அடுத்து வியாழன் இன்னொரு கால். இரண்டுமே அஞ்சு நிமிஷத்துக்கு மேல போன கால்ஸ். ஆனால் அது இங்கே கால் ரெகார்ட்ஸ்ல இல்லை. இன்னும் பொய் சொல்ல போறீங்களா வினாயக்??”
“இன்ஸ்பெக்டர்! நான் சந்திரமௌலி கிட்ட பேசலை. பேச வேண்டிய அவசியமும் இல்லை. கிட்டத்தட்ட என் மொத்த வாழ்க்கையையே நாசமாக்கினவன் அவன். நான் எதுக்கு அவன் கிட்ட பேசனும்??”
“பேச வேண்டாம், பழி வாங்க நினைச்சீங்க. யாருக்கும் தெரியாம செய்ய தான் ப்ளான் செய்தீங்க. உங்க பேட் லக் சக்தி அங்க பக்கத்துல இருந்தாங்க. உங்க மெஷின் கைக்கூலிங்க நீங்க ப்ளான் செய்ததை பக்காவா செய்து முடிச்சதை பார்த்துட்டாங்க!”
“சக்தியா? எந்த சக்தி? என்ன பார்த்தாங்க?”
“அதை எல்லாம் ஸ்டேஷன்ல போய் பேசலாம்ன்னு நினைக்கிறேன் வினாயக். அபினவ்!“ தென்றல்வாணன் கண்களால் சைகை செய்ய, அபினவ் வினாயக்கின் பக்கத்தில் வந்து நின்றான்.