வினாயக் என்ன செய்வது என்று புரியாமல் ப்ரியம்வதாவைப் பார்த்தான்.
“இன்ஸ்பெக்டர் சார், தப்பு செய்றீங்க. வினாயக் பத்தி உங்களுக்கு தெரியலை. அவர் நல்லவர்,” ப்ரியம்வதா தென்றல்வாணன் முன் நின்று வழியை மறித்தாள்.
“இங்கே பாருங்க, உங்க அம்மா மேல நான் ரொம்ப மரியாதை வச்சிருக்கேன். அதுக்காக தான் உங்க கிட்ட பொறுமையா பேசிட்டு இருக்கேன். வழியை விடுங்க.” தென்றல்வாணன் பற்களை கடித்துக் கொண்டு பேசினான்.
“என்ன பொறுமையா செய்றீங்க?? உங்களுக்கு யாரையாவது அரெஸ்ட் செய்து கணக்கு காட்டனும். அதுக்கு என் வினாயக் தானா உங்களுக்கு கிடைச்சார். நடக்காது! உடனே லாயர் கிட்ட பேசுறேன். உன்களை ஈஸியா விட மாட்டேன். வினாயக் எந்த தப்பும் செய்யலை, அவரை விட்ருங்க.” ப்ரியம்வதா மிரட்டுவதா, கெஞ்சுவதா என்று புரியாத க
...
This story is now available on Chillzee KiMo.
...
ொண்டிருந்த ப்ரியம்வதா போலீஸ் வண்டி கிளம்பவும், ஓடாத குறையாக வீடு நோக்கிப் போனாள்.
இங்கே ஜீப்பில் சின்ன யோசனைக்கு பின் தன் ஃபோனை கையில் எடுத்தான் தென்றல்வாணன். அதில் கான்டாக்ட்ஸ் லிஸ்ட்டில் தேடி “கலைவாணி” என்ற பெயரை கண்டுப்பிடித்து அழைத்தான்.
🌼🌸❀✿🌷
“உங்களை மட்டும் தான் நம்பி இருக்கேன் சக்தி மேடம். வினாயக் கெட்டவர் கிடையாது.