“சரி காப்பாத்தறேன் ஆனா நான் கேட்கறத நீ தரனும்” என சொல்லிவிட்டு அந்த குடிகாரனுடன் சண்டையிட்டு அடித்து விரட்டவும் அவன் சென்று ஒரு 10 பேருடன் வர அவர்களுடன் சண்டையிட்டு ஒருவழியாக வெண்ணிலாவை அழைத்துக்கொண்டு கார் பார்க்கிங்குங்கு வந்து சேர்ந்தான். அவன் கையில் அடிப்பட்டிருக்க வெண்ணிலா பதறினாள்
”அச்சச்சோ கையில பாரு ரத்தம் வருது”
“ஆமாம் வலிக்குது”
“வா ஆஸ்பிட்டல் போலாம்”
”ம் சரி வா” என அவளை அழைத்துக்கொண்டு அவசரமாக ஆஸ்பிட்டல் சென்று கையில் கட்டு போட்டுக்கொண்டு கெஸ்ட் ஹவுஸ் வந்தடைந்தான். கூடவே வெண்ணிலாவும் வந்திருந்தாள்.
”நீ போ நான் பார்த்துக்கறேன்”
“என்னாலதானே உனக்கு இப்படி அடிப்பட்டுச்சி சாரி” என அவள் அழவும் அவள் மீதான தவறான எண்ணம் தொலைந்து போய் அவளை அவள் வீட்டுக்கு போகுமாறு அனுப்பியும் வைத்தான் அர்ஜூன்.
கட்டிலில் படுத்தவன் மணியை பார்க்க அது அதிகாலை 4 என காட்டவும் பெருமூச்சுவிட்டு உறங்கலானான். அந்நேரம் ரிஷி போன் செய்ய கடுப்பானான் அர்ஜூன் போன் ஆன் செய்தவன்
”ஹலோ என்ன வேணும் என்ன தான் வேணும் உயிரு வேணுமா இப்பதான் போய்க்கிட்டு இருக்கு போதுமா” என கத்த
”ஏண்டா இப்படி கத்தற உன்னை ஆஸ்பிட்டல்ல பார்த்துட்டு தெரிஞ்சவங்க எனக்கு போன் பண்ணாங்க நானும் உன்னோட நிலைமையை பத்தி விசாரிக்கலாம்னா போன் பண்ணா இப்படி எரிஞ்சி விழற சே சே நீயெல்லாம் ஒரு மனுசனாடா அந்த வெண்ணிலா கூட அலையறியே