“ஆமாம் தாத்தா சின்னதா 3 தப்பு பண்ணிட்டேன்”
“தப்பா அது என்னடா சின்னதா தப்பு தப்புல என்ன சின்னது பெரிசு எல்லாமே ஒண்ணுதான் சரி சொல்லு என்ன தப்பு செஞ்ச”
“நந்தினியை கூட்டிக்கிட்டு மகாபலிபுரம் போனேன் அது தப்பாம் போன கொஞ்ச நேரத்தில வந்து கூட்டிட்டு போயிட்டான் அர்ஜூன்” என சொல்ல
”அவளை கூட்டிக்கிட்டு நீ ஏன் அங்க போன”
“அது வாழ்க்கையை பத்தி முக்கியமா டிஸ்கஸ் செய்யலாம்னுதான் தாத்தா”
“ஓ அதுக்கு நீ அவளை இங்க கூட்டிட்டு வந்து பேசியிருக்கலாமே”
“எனக்கு அப்ப தோணலை தாத்தா”
“சரி 2வது தப்பு என்ன”
“அவளை அடுத்த நாள் கூட்டிட்டு ஓட்டலுக்கு போனேன்”
“சாப்பிடறதுக்கா”
“இல்ல தங்கறதுக்கு ஒரு ரூம் எடுத்தேன்.”
“பாவி எதுக்குடா அப்படி செஞ்ச”
“கத்தாதீங்க தாத்தா எல்லாருக்கும் கேட்கப்போகுது. நான் சும்மா அவள் கூட பேசலாம்னுதான் அப்படி போனேன். ஓட்டல் ரூம்னா யாரும் தொல்லை பண்ணமாட்டாங்கன்னு நினைச்சேன் ஆனா அங்கயும் அர்ஜூன் வந்து கெடுத்து அவளை கூட்டிட்டு போயிட்டான் தாத்தா” என்றான் சோகமாக அவனை பார்த்து முறைத்துவிட்டு
Why chillzee team,
No updates for the past few days....
Very boring without Stories