மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 25 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“நீங்க சொல்றதை கேட்கும் போது அந்த வினாயக் ஜெயிலுக்கு போனது உங்க விஷயத்துல நல்லதுன்னு தோணுது. இருந்தாலும் அவன் தான் இப்போ பெயில்ல வெளியே வந்துட்டானே! துப்பாக்கி வச்சு ஷூட் செய்துச்சே அந்த பறக்குற ரோபோவோ, ட்ரோனோ என்னவோ, அது இன்னும் போலீஸ் கையில கிடைக்கலையாம். அதனால தான் அவன் வந்துட்டான்னு கேள்விப்பட்டேன். அந்த ட்ரோனை கண்டுப்பிடிச்சுட்டா வினாயக் மேல சுமத்தப் பட்ருக்க குற்றம் ப்ரூவ் ஆயிடும் போலருக்கு!” சக்தி சொன்னதை ஒப்பித்து முடித்து விட்டு, கலைவாணியின் முகத்தை கூர்ந்து கவனித்தாள் சத்யா.
“அப்படியா சொல்ற?” கலைவாணியின் முகத்தில் யோசனை இருந்தது!
அதெல்லாம் நமக்கெதற்கு என்று தள்ளி விடாமல், சீக்கிரமா கண்டுப்பிடிச்சா பரவாயில்லை என்றும் சொல்லாமல் எதற்கு இந்த யோசனை?
🌼🌸❀✿🌷
“இவங்க என் ஃபிரென்ட், சக்தி!” ப்ரியம்வதா சொல்லி முடிப்பதற்கு முன்பே ஸ்ரீனிவாஸ் நட்பும் ஆர்வமுமாக சக்தியிடம் கை குலுக்க கையை நீட்டினான்.
“சக்தி மேடம்! உங்களை நேருல சந்திப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. நீங்க ப்ரியம்வதாக்கு ஃபிரென்டா. வாட் அ சர்ப்ரைஸ்!” ஸ்ரீனிவாஸின் பேச்சில் உற்சாகம் கலந்திருந்தது.
“உங்களுக்கு ஏற்கனவே அவங்களை தெரியுமா ஸ்ரீனிவாஸ்?” ப்ரியம்வதா சந்தேகத்துடன் கேட்டாள்.
“எனக்கு மட்டுமா, சென்னைல இருக்க எல்லோருக்குமே அவங்களை தெரியும் ப்ரியம்வதா. நீங்க ரிசைன் செய்திருக்க கூடாது மேடம்!” ஸ்ரீனிவாஸ் ப்ரியம்வதாவிற்கு பதில் சொல்லியக் கையோடு சக்தியிடம் ஆதங்கத்தை வெளிப் படுத்தினான்.
“அது ஓல்ட் நியூஸ் ஸ்ரீனிவாஸ். அதை மறந்து விட்ருவோம். இப்போ வினாயக் பத்தி பேச