தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
66. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சஞ்சீவ் அறையில் இருந்து சென்றப் பிறகும் அவன் போன திசையையே பார்த்தப் படி அமர்ந்திருந்தாள் இந்து!
அவளுடைய பதிலை கூட எதிர்பார்க்காமல் அவன் சென்றது அவளுக்கு வலியைக் கொடுத்தது!
அவள் அவனிடம் சரி என்ற கண்டிஷன்களை பற்றி நினைக்கும் போது இமய மலையை தூக்கி வைத்தது போல் மனதில் பாரம் அழுத்தியது. ஏன் அவளுடைய காதலில், கல்யாணத்தில் மட்டும் இதுப் போன்ற குழப்பங்கள் வர வேண்டும்???
அவளை அதிகம் யோசிக்க விடாமல் தடுப்பதுப் போல வெளியே யாரோ வரும் அரவம் கேட்டது. அதன் தொடர்ச்சியாக வீணாவின் சிரிப்பு சத்தமும் கேட்டது. வருவது கீதாவும் வீணாவும் என்பது இந்துவிற்கு உடனே புரிந்தது.
பொதுவாக இந்து அவளின் தோழிகளிடம் இருந்து அதிக விபரங்களை மறைத்ததில்லை! இருவரில் ஒருவரிடமாவது சொல்லிவிடுவாள்! இல்லையென்றாலும் அவர்களே கண்டுப்பிடித்து விடுவார்கள்! இப்போது அவளுடைய சஞ்சீவ் உடனான ‘டீல்’ பற்றி இவர்களிடம் சொல்லாமல் / தெரியாமல் மறைப்பதே நல்லது என நினைத்துக் கொண்டாள்!
மனதில் முடிவு செய்து அவள் முகத்தை மாற்றிக் கொள்ள முயலும் போதே வீணாவும், கீதாவும் ஒன்றாக அறைக்குள்ளே வந்தார்கள்!
மனதில் ஓடிய எதையும் வெளிபடுத்தாது அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள் இந்து!
🌼🌸❀✿🌷
இந்துவிற்கும் சஞ்சீவிற்கும் சம்மதம் என்று தெரிந்ததுமே, பெரிய சடங்கு சம்பிரதாயம் எல்லாம் பார்க்காமல் அன்றே இரண்டு குடும்பமும் தாம்பூல தட்டை மாற்றி திருமணத்தை உறுதி செய்து விட்டு, இரண்டு மாதங்களுக்கு பின் திருமணம் என்று முடிவு செய்தார்கள்.
மனதில் இருப்பதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் கீதாவையும் வீணாவையும் இரண்டு