வேண்டி இருந்திருக்கும். அந்த ஒரு விதத்தில், அவள் எந்த முயற்சியும் செய்யாமல் தானாகவே தீர்வு கிடைத்திருந்தது.
திருமணத்திற்கான எர்பாடுகள் அனைத்தும் சுறுசுறுப்பாக நடக்கத் தொடங்கியது!
ராஜீவும் சேகரும் முன் நின்று திருமண மண்டபம் மற்றும் மற்ற வெளி வேலைகளின் பொறுப்புகளை பகிர்ந்துக் கொண்டனர்.
திருமணத்திற்கான நகைகள் வாங்க இந்து, அர்ச்சனா, கீதா, கண்மணி, காஞ்சனா என அனைவரும் ஒன்றாக நகை கடைக்கு சென்றார்கள். சஞ்சீவிற்கு அன்று வேலை அதிகமாக இருந்ததால் அவன் வர முடியவில்லை என்ற செய்தியை யாருமே தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.
நகை வாங்க சஞ்சீவ் வராததை ஏற்றுக் கொண்ட காஞ்சனா, திருமணத்திற்கு சேலைகள் எடுக்க செல்லும் போதும் சஞ்சீவ் வர முடியாது என சொல்லவும் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தாள்.
"என்ன சஞ்சீவ் புதுசா வேலை வேலைன்னு சொல்லிட்டு இருக்க??? உனக்கு ரொம்பவே பொறுப்பு வந்தாச்சு, நாங்க எல்லோரும் ஒத்துக்குறோம். நீ இப்படி எல்லாம் எங்களுக்கு ப்ரூவ் செய்யனும்னு இல்லை. ஒழுங்கா நாளைக்கு கடைக்கு எங்க கூட வா!"
"ப்ச் அம்மா, விஷயம் தெரியாம விளையாடாதீங்க. நீங்க பாட்டுக்கு நம்ம ஹாஸ்ப்பிட்டலை அம்போன்னு விட்டுட்டீங்க. நான் தானே அதையும் சேர்த்து கவனிக்கணும்?" என்றான் சஞ்சீவ் அலுப்புடன்!
"அட! ஒரு நாள் கடைக்கு வான்னு சொன்னா, என்னவோ ரொம்ப தான் அலட்டிகுற?"
"ப்ளீஸ் அம்மா," என்றான் சஞ்சீவ் கெஞ்சுதலாக
{/f90filter}
!
"என்ன சஞ்சீவ் இப்படி அடம் பிடிக்குறீங்க? எங்களுக்கு சாரீ எடுக்கவா உங்களை கூப்பிடுறோம்? உங்க இந்துவுக்கு எடுக்க தானே வாங்கன்னு சொல்றாம்," என்றாள் கீதா.