(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்

  

67. மனம் விரும்புதே உன்னை... உன்னை...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

திட்டமிட்டிருந்த நேரத்திற்கு முன்பே கிளம்பி விட்ட அர்ச்சனாவும், இந்துவும், காஞ்சனா குடும்பத்தினர் வந்த உடனேயே அவர்களுடன் கிளம்பினார்கள்.

   

காரின் அருகில் சஞ்சீவை பார்த்ததும் இந்துவின் மனம் அவளையும் மீறி துள்ளிக் குதித்தது!

    

அவளை பார்த்து எந்த வித சலனமும் இல்லாமல் நின்றவனைப் பார்த்தப் படி கொஞ்சம் தயக்கத்துடன் காரின் அருகில் சென்றாள் இந்து. அவளுடன் கூட நடந்தப் படி எதையோ சொல்லிக் கொண்டே வந்த கீதா,

   

"நீ என்ன நினைக்கிற இந்து?" என்ற கேள்வியோடு முடிக்கவும், இந்து விழித்தாள்.

   

கீதா அதுவரை என்ன சொன்னாள் என்பதே அவளுக்கு தெரியாதே!!!

   

சஞ்சீவும் இந்துவை தான் கவனித்துக் கொண்டிருந்தான். முகத்தை கல் போல் வைத்திருந்தாலும், பல நாட்களுக்கு பிறகு இந்துவை நேரில் பார்த்ததும் அவன் மனதில் தென்றல் வீச தான் செய்தது! அவனை பார்த்ததும் சட்டென்று இந்துவின் முகம் மலர்ந்ததையும், அவளின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்ததையும் நாள் முழுவதுமே பார்த்துக் கொண்டிருக்கலாம் என அவனுக்கு தோன்றியது!

   

கீதாவின் பேச்சை கவனிக்காமல் மாட்டிக் கொண்டு இந்து விழிப்பதைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது! அது இந்துவிற்கு தெரியாமல் இருக்க, திரும்பி கார் கதவை நோண்டினான்.

   

இந்துவின் பதிலுக்காக கீதா காத்திருக்கும் போதே,

   

"இது என்ன அக்கா கேள்வி! சஞ்சீவ் அத்தானுக்கு பிடிச்ச கடைக்கு போகலாம். இந்து அக்கா ஒன்னும் சொல்ல மாட்டாங்க," என்று அந்த பேச்சின் நடுவில் வந்து தன்னையும் அறியாமல் இந்துவை காப்பாற்றினாள் கண்மணி.

   

அன்று ராஜீவின் சுமோ’வை எடுத்து வந்திருந்தான் சஞ்சீவ். பெண்கள் ஒவ்வொருவராக காரில் அமரவும், அவனும் டிரைவர் சீட்டில் அமர்ந்தான். அவனுக்கு நேரே பின் சீட்டில் இந்து 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.