அமர்ந்திருந்தது அவனுக்கு கூடுதல் கிறக்கத்தைக் கொடுத்தது!
இந்துவின் அருகாமை எப்போதுமே அவனுக்கு ஸ்பெஷல்! இப்போது திருமண பேச்சிற்கு பிறகு வந்திருக்கும் முதல் சந்திப்பு வேறு. அவனின் மனம் இறக்கைக் கட்டிக் கொண்டு பறந்துக் கொண்டிருந்தது!
அவன் இந்துவிடம் போட்ட கன்டிஷன்களோ, லிஸ்ட் மேல் லிஸ்ட் போட்டு சொன்ன நிபந்தனைகளோ எதுவுமே அவனுக்கு நினைவுக்கு வரவில்லை! அவனின் இந்துவின் அருகே இருக்கிறான்! அந்த ஒரே எண்ணம் தான் மனதில் பரவி இருந்தது!
அனைவரும் காரில் ஏறியதும், பொதுவாக எங்கே செல்ல வேண்டும் என கேட்டு விட்டு, அவர்கள் சொன்ன கடைக்கு வண்டியை செலுத்தினான்.
🌼🌸❀✿🌷
சேலைக் கடையில் எப்போதும் போல் கூட்டம் அலைமோதிக் கொடு இருந்தது ஆனால் அவர்கள் அனைவரும் சென்ற விலை உயர்ந்த பட்டு புடவை செக்ஷனில் அவ்வளவு கூட்டம் இல்லை!
அர்ச்சனாவும் காஞ்சனாவும் வெறும் மேற்பார்வையோடு ஒதுங்கிக் கொள்ள, கீதா முழு மூச்சுடன் இந்துவிற்கு சேலை தேர்வு செய்ய துவங்கினாள். கண்மணியும் அவளுக்கு துணை புரிந்தாள். இந்துவிடம் மட்டுமல்லாமல், அருகில் அமைதியாக நின்றிருந்த சஞ்சீவிற்கும் பிடித்திருக்கிறதா என்று கேட்டு தான் கீதா ஒவ்வொரு சேலையாக தேர்வு செய்தாள்.
ரிசப்ஷனிற்கு என இந்துவிற்கு பிடித்த சிவப்பு நிற சேலைகளை சல்லடை போட்டு கீதாவும், கண்மணியும் தேடினார்கள்!
அ
{/f90filter}
ந்த தேடல் வேட்டையில், இளஞ்சிவப்பு நிறத்தில், முழுவதும் தங்க நிறத்தில் வேலை பாடுகள் நிறைந்த அழகிய சேலை ஒன்று கீதாவின் கையில் கிடைத்தது! அதன் வேலைப்பாடுகள் கண்ணைப் பறித்தது!