(Reading time: 7 - 13 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 38 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

றுநாள் மீண்டும் வைஜெயந்தியின் வீட்டிற்கு சென்றான் விக்கிராந்த்.

   

முன்தினம் பற்றி எதுவும் சொல்லாமல்,

   

“பெரியம்மா நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் செய்யனும்,” என்றான்.

   

விக்கிராந்த் திடீரென்று மீண்டும் வந்ததே வைஜெயந்திக்கு ஆச்சர்யம் தான்! இப்போது அவனின் பேச்சு அந்த ஆச்சர்யத்தை அதிகமாக்கியது!

   

“உதவியா, உனக்கா? என்ன செய்யனும் சொல்லு விக்கி!” மனதை மறைக்காது குரலிலும் ஆச்சர்யம் தெரியக் கேட்டாள் வைஜெயந்தி.

   

“ப்ரியா கிட்ட எங்க கல்யாண பேச்சை ஆரம்பிக்கனும். எனக்கு அவளைப் பிடிச்சிருக்குன்னு சொல்றது சரியா இருக்காதுன்னு உங்களுக்கு தோணினா, அம்மா அப்பா அவ எங்க வீட்டு மருமகளா வரணும்னு விரும்பி உங்க கிட்ட கேட்டாங்கன்னு சொல்லனும்.”

   

வைஜெயந்தி அமைதியாக விக்கிராந்தைப் பார்த்தாள்.

   

“நான் அம்மா அப்பா பத்தி சும்மா சொல்லலை பெரியம்மா. நான் தான் உங்க கிட்ட சொன்னேனே, அம்மாக்கும் அப்பாக்கும் ரொம்ப நாளாவே இப்படி ஒரு ஆசை மனசுல இருக்கு!”

   

கண்களை சேலையில் நாசுக்காக துடைத்துக் கொண்ட வைஜெயந்தி,

   

“சரிப்பா நான் ப்ரியா கிட்ட பேசுறேன்” என்றாள்.

   

“தாங்க்ஸ் பெரியம்மா,” என்ற விக்கிராந்தின் முகம் பளிச்சென்று மலர்ந்தது!

   

🌼🌸❀✿🌷

   

விக்கிராந்துடன் சென்னைக்கு செல்ல வந்த வைஜெயந்தியை ஆச்சர்யமாகப் பார்த்தாள் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.