“ம்ம்ம்...”
“எனக்கு டைம் ஆச்சு கீர்த்தி, நான் கிளம்புறேன். அத்தை கிட்ட ஃபோன் செய்து சொல்லிட்டேன். நான் வீட்டுக்குள்ளே வரலைன்னு தப்பா நினைக்க மாட்டாங்க... சோ...”
“ம்ம்ம்ம்...”
சிணுங்கிக் கொண்டு அமர்ந்திருந்தவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தியாகு. கிளம்ப வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த அவனுக்கும் கிளம்ப சுத்தமாக மனசில்லை தான்!
அவளுக்கும் இறங்க மனதிருப்பதாக தோன்றவில்லை!!!
தியாகுவின் பார்வையை கவனித்த கிருத்திகா,
“டைம் ஆச்சு, டைம் ஆச்சுன்னு சொல்லிட்டு, என்ன பார்த்துட்டே இருக்கீங்க????” என்றாள் சீண்டலாக!
“ம்ம்ம்... உனக்கு அம்னீசியா சரி ஆச்சுன்னு நீ சொன்னது நிஜமா இருக்க கூடாதான்னு யோசிக்குறேன்!”
முதல் முறையாக மனம் திறந்து காதலை வெளிப்படையாக அவளிடம் சொல்கிறான்!!!
கிருத்திகாவிற்கு சந்தோஷமாக இருந்தது! ஆனால் என்ன பதில் சொல்வது என்று புரியாததால் அமைதியாகவே காரில் இருந்து இறங்கியவள்,
“பார்த்து போயிட்டு வாங்க,” என்றாள்.
“ம்ம்ம்... பை,” என்ற தியாகு, மனமே இல்லாதவனைப் போல மெல்ல காரை கிளப்பி சென்றான்.