(Reading time: 6 - 12 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

"நீ அவ்வளவு நல்லவனாடா சரோ," என்றான் விக்கிராந்த் கேலியாக!

   

"அதென்னவோ தெரியலை விக்கி! ஆனா உன் அளவுக்கு கெட்டவனில்லைடா, அது எனக்கு தெரியும்!"

   

"சூப்பர் சரோ! பேச்செல்லாம் பயங்கரமா இருக்கு, எல்லாம் ரூபிணி ட்ரெயினிங்கா? அசத்துற," என்றாள் ஜான்வி!

   

"க்கும்! அது தான் குறைச்சல்!"

   

"என்னடா அலுத்துக்குற?"

   

"ப்ச்! உங்களுக்கு தான் தெரியுமே அங்கே கல்யாண மண்டபத்துல என்ன நடந்ததுன்னு! ரூபிணி வேலைக்கு போயே தீருவேன்னு அடம் பிடிக்குறா!"

   

"சரி, அதுல என்ன ப்ராப்ளம் இருக்கு? நீ தான் அவங்க ஆசைப் பட்டா போகட்டும்னு அப்போவே சொன்னீயே," என்றான் விக்கிராந்த்.

   

"ஆமாம்! இப்போ நான் ஆஃபிஸ் வந்தது அதுக்கும் சேர்த்து தான்! வேற எங்கே ஃப்ரீயா ரெஸ்யூம் பிரின்ட் அவுட் எடுக்க முடியும்?"

   

"இது தான் என் நண்பன் சரவணன்! நீ மாறவே இல்லை! மாறவும் மாட்ட!"

   

"நன்றி நண்பா! நான் போய் வந்த வேலையை பாக்குறேன். சீக்கிரம் வரேன்னு ரூபிக்கிட்ட சொல்லிட்டு வந்தேன்."

   

சரவணன் சென்றதும் ஜான்வியும் விக்கிராந்தும் ஒரு புன்னகையை பகிர்ந்துக் கொண்டு தங்கள் இருக்கைக்கு திரும்பினார்கள். விக்கிராந்தின் மனம் மீண்டும் தன் மனம் கவர்ந்தவளைப் பற்றி சிந்திக்க தொடங்கியது!

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.