தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
71. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
"என் பெயரை சொல்லி கூப்பிட கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல?" எரிந்து விழுந்தான் சஞ்சீவ்.
இந்து அவனிடம் வரவேற்பை எதிர்பார்க்கவில்லை என்றாலும், இப்படி எரிந்து விழுவான் என்றும் நினைக்கவில்லை!
"சாரி, எப்படி கூப்பிடுறதுன்னு தெரியலை... அதான்... சாரி..." என்று தடுமாறினாள் இந்து.
அவளின் தடுமாற்றத்தை கண்டுக்கொள்ளாமல், "இப்படி என் ரூம் பக்கம் வரக் கூடாதுன்னு சொன்னேன் தானே? இந்த மயக்கும் மோகினி வேலை எல்லாம் என் கிட்டே வேண்டாம்," என இப்போதும் எரிந்து விழுந்தான் சஞ்சீவ்.
அவன் சொன்ன வார்த்தைகள் அவளை தைத்தன! அவன் பேச்சில் இருந்த கோபமும் அவளை வருத்தியது!
சஞ்சீவ் ஏன் இப்படி மாறி விட்டான்?? மனதில் கேள்வி எழும் போதே, விளக்கம் கொடுக்க முனைந்தாள் இந்து.
"கதவு லாக்காகி இருக்கும்னு நினைச்சு..."
"ஷட் அப்! எனக்கு ரீசன் எல்லாம் தெரிய வேண்டாம்! இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை!"
சஞ்சீவ் பேசிய விதம் பிடிக்காது அவள் மெளனமாக நின்றாள்.
சஞ்சீவிற்கு என்ன தோன்றியதோ, "அப்படி என்ன பத்து மணிக்கு பேச வேண்டிய விஷயம்?" என்றான். மென்மையாக கேட்கவில்லை என்றாலும் முகத்தில் அறைந்ததுப் போலவும் அவன் வினவவில்லை.
"அது... அம்மாக்கு நாளைக்கு பிறந்த நாள்... நான் நைட் ஒரே ஒரு தடவை ஃபோன் செஞ்சு விஷ் செய்யட்டுமா?"