(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

அதில் கீதாவை அழைத்தாள்.

   

"ஹலோ இந்து!" பேசிய கீதாவின் குரலில் ஆச்சர்யம் இருந்தது!

   

"கீதா அக்கா, எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் செய்ய முடியுமா?"

   

"என்ன விஷயம் சொல்லு..."

   

"நாளைக்கு அம்மாக்கு பர்த்டே க்கா. அவங்களுக்கு நைட் பன்னிரண்டு மணிக்கு ஃபோன் செஞ்சு விஷ் செய்ய முடியுமா?"

   

நீயே சொல்லலாமே எனக் கேட்க நினைத்த கீதா, திருமணமாகி ஒருவாரமே ஆகி இருக்கும் தோழியிடம் அதை எப்படி கேட்பது என நினைத்து நாக்கை கடித்துக் கொண்டாள்! இந்துவின் உதவிக் கோரலுக்கான காரணத்தை புரிந்தவளாக,

   

"புரியுது புரியுது இந்து... நான் விஷ் செய்றேன்... நீ கவலைப் படாதே," என்றாள் கீதா கேலி இழையோட!

   

கீதா தவறாக புரிந்துக் கொண்டது புரிந்தாலும் அதை மாற்ற விரும்பாமல்,

   

"தேங்க்ஸ் கீதா அக்கா," என்று மட்டும் சொல்லி மொபைலை அணைத்து வைத்தாள் இந்து.

   

இரவு விஷ் செய்வது சரி! ஆனால் நாளை??? நாளை அம்மா எப்படியும் அவளின் பிறந்த நாள் வாழ்த்தை எதிர்ப்பார்ப்பார்கள் தானே? என்ன செய்வது என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள் இந்து!

   

 🌼🌸❀✿🌷

   

இந்து நினைத்ததுப் போலவே அர்ச்சனா இந்துவின் ஃபோன்-காலை எதிர்ப்பார்க்கத் தான் செய்தாள். சஞ்சீவும் இந்துவும் வீட்டிற்கு வருவார்கள் என்றும் கூட எதிர்பார்த்தாள். இரவு பன்னிரண்டு மணிக்கு கீதா ஃபோன் செய்து இந்து சொன்னதை சொல்லி வாழ்த்தியப் போது அர்ச்சனாவிற்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், மகள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்ற 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.