"சரி இந்து, நீ கிளம்பு... அப்புறம் சஞ்சீவ் தேடி வரப் போறார்" என்றாள் கீதா கடிகாரத்தில் மணியை பார்த்தப்படி!
அவள் சொல்லி முடிக்கவும்,
"கீதா," என்றழைத்த ராஜீவ் குரல் கேட்கவும் சரியாக இருந்தது!
அங்கிருந்த எல்லோரின் முகத்திலும் கேலி இழையோடிய புன்னகை தோன்றியது.
"கீதா அக்கா யாருக்காக சொல்றீங்கன்னு இப்போ தானே தெரியுது," என்றாள் இந்து கிண்டலாக!
ஆனால், அத்தோடு பெண்கள் மாநாடு கலையவும், பேசியதை எல்லாம் அசைப் போட்ட படி, புன்னகையோடு அவர்களின் அறையினுள் வந்தாள் இந்து! அங்கே ‘காமன் ஏரியாவில்’ இருக்கும் சோஃபாவில் சஞ்சீவ் அமர்ந்திருப்பதை பார்த்து ஆச்சர்யப் பட்டாள். பொதுவாக அந்த அறைக்கு உள்ளே வந்த உடனேயே அவனின் அறைக்குள் நுழைந்துக் கொள்வது சஞ்சீவின் வழக்கம். இந்து தான் சில முறை அங்கே அமர்ந்து பத்திரிக்கைகள் படித்திருக்கிறாள்!
யோசனையுடன் அவள் பார்க்க, அவளுக்காகவே காத்திருந்தவன் போல்,
"உன்கிட்ட ஒரு விஷயம் பேசனும்..." என்றான் சஞ்சீவ்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...