(Reading time: 25 - 50 minutes)
Ullamellam un vasamaai aanathinaale
Ullamellam un vasamaai aanathinaale

தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 03 - சசிரேகா

  

மாலை நேரம் வீடு திரும்பினான் ஜெகதீஷ் கூடவே கிருபாஷினியும் வந்தார். வீட்டிலோ ஹாலில் தயாசாகர் கலவரத்துடன் அமர்ந்திருக்க எதிரே பிஏ பயத்துடன் இருக்க 10 அடி இடைவெளி விட்டு அகிலேஷ் பீதியில் நின்றுக் கொண்டு இருந்தான். அவர்களின் முகபாவனையை வைத்தே ஏதோ பிரச்சனை என புரிந்துக் கொண்ட ஜெகதீஷ் தன் தாயிடம்

   

”அம்மா நீ முன்னாடி போ நான் பின்னாடி பொறுமையா வரேன், அதுக்குள்ள என்ன பிரச்சனைன்னு கேட்டு வை”

   

”தனியா ஏன் என்னை அனுப்பற நீயும் என்கூடவா உங்கப்பாவை பார்த்தாலே பயமாயிருக்கு”

   

”நீயுமா சரி வா” என அழைக்க கிருபாஷினி தன் மகனின் கையை பற்றிக் க

...
This story is now available on Chillzee KiMo.
...

”இது எல்லாத்துக்கும் காரணம் உன் புள்ளைதான்” என கத்த கிருபாஷினி ஜெகதீஷை பார்க்க அவரோ

   

”அவனை சொல்லலை அகிலை சொன்னேன்”

   

”அவனே பாவம், உடம்பு சரியில்லாம இருக்கான் அவனை ஏன் திட்டறீங்க முதல்ல என்ன விசயம்னு சொல்லுங்க” என கேட்க அதற்கு அவரோ பிஏவை பார்க்க அவன் புரிந்துக் கொண்டு கிருபாஷினியிடம்

   

”மேடம் ஒரு பிரச்சனை மேடம்“

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.