அப்போது, “சுமித்ரா...” என்று கோபத்தோடு அழைத்த கமலின் குரல் மாடியில் இருந்துக் கேட்டது.
“நீ ஏன் நடுவுல வந்து கவிக்காக பேசின சுமி... இப்போ உன்னை திட்டப் போறான்...” என்றாள் பூங்கோதை கவலையுடன்.
“பரவாயில்லை அத்தை...” என்றபடி மாடியை யோசனையுடன் பார்த்தாள் சுமித்ரா...
“சுமித்ரா...!” மீண்டும் அலறியது கமலின் குரல்.
❀✿❀✿❀✿
“சுமித்ரா!!!!” என்று மூன்றாவது முறையாக அலறிய கமல், கண்ணாடியில் பிம்பமாக தெரிந்த மனைவியை பார்த்து விட்டு திரும்பி பார்த்து முறைத்தான்.
“என்ன நினைச்சுட்டு இருக்க நீ மனசுல?”
சுமித்ரா பதில் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஹேய் என்ன??? நான் கேட்குறேன் நீ பாட்டுக்கு சிலை மாதிரி நிக்குற? என்ன கொழுப்பா?”
சுமி இப்போதும் எதுவும் சொல்லவில்லை!
“உன்னை தான் கேட்குறேன்!!!! அப்படி என்ன யோசிக்குற?”
அவனின் அருகே வந்த சுமித்ரா,
“என்ன யோசிக்குறேன் தெரியுமா.... கடுகு எடுத்துட்டு வராமல் போயிட்டேனேன்னு யோசிக்குறேன்...” என்றாள் புன்னகையுடன்.