“இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை??? ஆசை இருக்க வேண்டியது தான்... அதுக்காக பேராசை இருக்க கூடாது சார்....”
“அண்ணி! உங்களுக்கு தெரியாமல் எத்தனையோ விஷயங்கள் எங்களுக்குள்ளே இருக்கு! அதெல்லாம் என்னோட வருங்கால பெட்டர் ஹாஃப்பே உங்க கிட்ட சொல்லாத போது நான் சொல்றது சரியில்லை...”
“ஓஹோ அவ்வளவு தூரம் போயாச்சா? இரு இரு உன்னை கவனிச்சுக்கிறேன்...”
துளசி ஃபோனை கோபமாக வைப்பதை பார்த்திருந்த சரத்,
“என்ன என் செல்லத்துக்கு இவ்வளவு கோபம்? இப்போ என்ன செய்தான் உதய்?” எனக் கேட்டான்.
“உங்க தம்பி விஷயம் என்னன்னு சொல்ல மாட்டானாம்...”
“அவன் சரியா தானே சொல்றான்?”
துளசி சரத்தை பார்த்து முறைத்தாள்.
எழுந்து மனைவியின் அருகே வந்த சரத், குழந்தையை செல்லம் கொஞ்சுவது போல அவளின் இரு கன்னங்களையும் செல்லமாக கிள்ளினான்...
“துளசி செல்லம், அவங்க இரண்டு பேரையும் ஃப்ரீயா விடு... நீ அவங்களுக்கு ஹெல்ப் செய்ய நினைக்குறன்னு எனக்கும் தெரியும் உதய்க்கும் தெரியும்.... ஆனால் தேவைப் படும் போது மட்டும் உதவினால் தான் நமக்கு மரியாதை...”
“ஆனால்...”
“போதும் போதும் உன்னோட சோஷியல் சர்வீஸ்! இப்போ எல்லாம் நீ என்னை கவனிக்குறதே