சம்யுக்தாவோ அவரிடம்
”இங்க சிவான்னு ஒரு போலீஸ் இருப்பாரே, அவர் எந்த ஸ்டேஷனை சேர்ந்தவருன்னு சொல்லுங்க“
”சிவாவா அப்படின்னு யாரும் இல்லையே“
”உங்க ஸ்டேஷனை சொல்லலை வேற ஸ்டேஷன்ல இருப்பாரே”
”சிவான்னு யாரும் இல்லைம்மா“
”அவரு எஸ்ஐஆ இருந்தாரு, தில்லையோட நண்பர், அவரோட மனைவி கூட ஒரு டாக்டர் பேரு ஜனனி”
”என்னம்மா இது புதுத்தகவல் சொல்ற, இப்படி நான் எதையும் கேள்விப்படலையே, 30 வருஷமா நான் இங்க இருக்கேன், சிவாங்கற பேர்ல எந்த எஸ்ஐயும் இல்லையேம்மா” என சொல்ல அவளோ குழம்பினாள்
”இல்லைங்க அவர் இருந்தாரு, எனக்குத் தெரியும், நான் அவரைப் பார்த்திருக்கேன் போலீஸ் ட்ரஸ்ல இருப்பாரு“
”இதப்பாரும்மா போலிகளை பார்த்துட்டு சொல்றன்னு நினைக்கிறேன், அந்த தில்லையிருக்கானே அவன் இது போல போலியான ஆட்களை போலீஸா நடிக்க வைச்சி நிறைய பேரை ஏமாத்தியிருக்கான், அதுல சிவாங்கறவனும் ஒருத்தனா இருப்பான் போல, அதை நீ நம்பாதம்மா கிளம்பு, சிதம்பரம் சார் வந்ததும் நான் தகவல் தரேன் இப்ப கிளம்பும்மா” என சொல்ல அவளோ தந்தையைப் பார்க்க அவரோ
”முதல்ல சிதம்பரம் சார் வரட்டும், அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லி உதவி கேட்கலாம், இப்ப வாம்மா கிளம்பலாம் பசிக்கலையா உனக்கு”