”அவர் உயிரோடதான் இருக்காரு”
”அப்படியே அவன் உயிரோட இருந்தா அவனை தேடிப்பிடிச்சி ஒண்ணு ஜெயில்ல போடுவாங்க இல்லை என்கவுன்டர் பண்ணிடுவாங்க பரவாயில்லையா”
”அவர் மேல தப்புக்கள் இருக்கறதுக்கான ஆதாரங்கள் இல்லாம உங்களால எதுவும் செய்ய முடியாது ஆபிசர்” என்றாள் உறுதியாக சம்யுக்தா
”ஓ அப்படியா ம் உங்க புருஷன் தப்பானவன்னு தெரிஞ்சும் அந்தாளுக்காக வக்காலத்து வாங்கிட்டு வந்திருக்கீங்களா, இதனால உங்களுக்கும் தண்டனை கிடைக்கும்”
”பரவாயில்லை என் புருஷனை தேடிக் கொடுங்க அது போதும்”
”புருஷனா அவன்தான் செத்து மார்ச்சுவரியில இருக்கானே”
”அது என் புருஷன் கிடையாது”
”பார்க்காமயே சொல்லக் கூடாது”
”அப்ப எனக்கு பார்க்கறதுக்கு அனுமதி கொடுங்க” என கேட்க அவனோ அவளை உன்னிப்பாகப் பார்த்தான்.
”அவனோட கல்யாணம் ஆகி எத்தனை நாள் ஆச்சி”
”கொஞ்ச நாள் ஆச்சி”
”எங்கிருந்து வர்றீங்க“
”சென்னையில இருந்து”