“சாரி பா... எப்போ வந்த...?”
“பத்து நிமிஷம் ஆச்சு... எவ்வளோ டையர்டா இருந்தா பகல் நேரத்துல இப்படி அசந்து தூங்குவ? அப்பப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடு சுமி...”
“ப்ச்.. சும்மா ப்ளேட் போடாத ஹேமா....”
“நல்லதை சொன்னா கேட்க மாட்டீயே...! அப்பபோ இப்படி தூங்கவாவது பேசாம இங்கே வா....”
“ரொம்ப நல்ல டாக்டர்டி நீ...! நல்லா தான் ஹாஸ்ப்பிட்டலை நடத்துற... சரி, டைம் ஆச்சு... இப்போவாவது எனக்கு ஏதாவது மெடிசின் கொடுக்க போறீயா இல்லையா?”
“தரேன் இரு இரு... எங்க வலிக்குதுன்னு சொன்ன?’
சுமித்ரா தன் வயிற்று பகுதியில் வலித்த இடத்தை காட்ட, ஹேமா அவள் முன்பு சொல்லி இருந்த மற்ற விபரங்களை நினைவில் கொண்டு வந்து தன் மருத்துவ அறிவை வைத்து மனதினுள் வேகமாக ஆய்வு செய்தாள்...
“என்னடி யோசிக்குற? படிச்சது எல்லாம் மறந்திருச்சா? நிறைய குண்டு குண்டா புக்ஸ் வச்சிருக்கியே, அதுல வேணா பார்த்து ஏதாவது மருந்து கொடு...”
சுமித்ரா வழக்கம் போல வாயாட, ஹேமா அவளை யோசனையுடன் பார்த்தாள்.
“என்னடி இப்படி பார்க்குற?”
“சுமி, இன்னைக்கு இங்கே மருந்து, டெஸ்ட் எதுவும் வேண்டாம்... நாளைக்கு நான் சொல்ற இடத்துல போய் பாரு..”
“ப்ச்... விளையாடாதே ஹேமா... என்னால நாளைக்கு எல்லாம் போக முடியாது... வீட்டுல