அந்நேரம் தில்லையின் செல்போன் அலறியது.
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
என ரிங்டோன் ஒலிக்க அவளோ குழப்பத்துடனும் ஆச்சர்யத்துடனும் சுற்றி முற்றிப் பார்த்தாள். தில்லையோ சித்தனிடம்
”சித்தா என் போன் எங்க தேடு” என சொல்ல அவனும் தேடி ஒரு இடத்தில் இருந்த அவனது செல்போனை கொண்டு வந்து கொடுக்க அதற்குள் போன் நின்றுவிட்டது. யார் என பார்த்துவிட்டு அமைதியாக வைத்துவிட்டு சாப்பிடத் தொடங்கினான். அடுத்த நொடி மறுபடியும்
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
என ஒலிக்க அது முழுவதும் பாடி முடிக்கும்வரை காத்திருந்து எடுத்துப் பேசினான் தில்லை
”சொல்றா நானா சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன், யாரு அவனா கருணாதானே சரி விடு, அவனை நான் முடிக்கறேன் டேய் அவன் செத்துட்டான்ங்கற செய்தி நாளைக்கு உனக்கு வரும் போதுமா, என்னை நிம்மதியா சாப்பிட விடு, ஏன்? எதுக்கு? அவன் எதுக்கு உயிரோட இருக்கனும், எனக்குத் தேவையில்லை
சரி முடிஞ்சா பார்க்கிறேன் இல்லைல்ல என்னால எதுக்கும் உத்தரவாதம் தர முடியாது, சரி சரிடா யப்பா சரி நாளைக்கு சொல்றேன் எப்பவா நேரம் பார்த்தா முடிக்க முடியும், முடிச்சிட்டு